Newsஇளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு நீடிக்கப்படும்

இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு நீடிக்கப்படும்

-

அலிஸ் ஸ்பிரிங்ஸில் இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் ஆறு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க் கிழமை பாடசாலை மீள ஆரம்பிக்கும் வரை அது நடைமுறையில் இருக்கும் என வடமாகாண முதலமைச்சர் ஈவா லாலர் அறிவித்துள்ளார்.

அதன்படி, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும், அது பாடசாலை விடுமுறை காலத்தை உள்ளடக்கும் எனவும் அமைச்சர் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நகர மையத்தில் வன்முறை காரணமாக, மார்ச் 27 முதல் இரண்டு வாரங்களுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன் விதிகளின்படி, ஊரடங்கு உத்தரவின் போது நகரத்திலோ அல்லது தெருக்களிலோ காணப்படும் எந்தவொரு குழந்தையும் வீட்டிற்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படும் மற்றும் குற்றவியல் தண்டனைகள் பொருந்தாது.

இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம் வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நடைபெற்ற கூட்டத்தில் அதன் காலத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் மூலம் புறநகர்ப் பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் ஈவா லாலர் தெரிவித்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...