Sports2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி - IPL 2024

2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி – IPL 2024

-

IPL கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 21 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா 16 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்க்ரம் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த நிதிஷ் ரெட்டி, அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடி அரைசதமடித்த அவர், 64 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்துல் சமத் 25 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் , பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் பேர்ஸ்டோ ஓட்டம் எதுவும் எடுக்காமலும் , பிரப்சிம்ரன் சிங் 4 ஓட்டங்களும் , தவான் 14 ஓட்டங்களும் எடுத்து ,ஆட்டமிழந்தனர்.

பின்னர் சாம் கரன் , ஷிகந்தர் ராசா ஆகியோர் நிலைத்து ஆடி ஓட்டங்களை குவித்தனர். அணியின் ஸ்கோரை 58ரன்னாக இருந்தபோது சாம் கரன் 29 ஓட்டங்களில் வெளியேறினார். தொடர்ந்து ஷிகந்தர் ராசா 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஷசாங் சிங் , அஷுதோஷ் சர்மா இருவரும் அதிரடி காட்டினர். கடைசி ஓவரில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பஞ்சாப் அணியால் 26 ஓட்டங்கள் மட்டும் எடுக்க முடிந்தது. ஷசாங் சிங் 25 பந்துகளில் 46 ஓட்டங்களும் , அஷுதோஷ் சர்மா 12 பந்துகளில் 28 ஓட்டங்களும் எடுத்தனர். இதனால் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் நிலைகொண்டுள்ள வெப்பமண்டல சூறாவளி – 185km வேகத்தில் வீசும் காற்று!

கடுமையான வெப்பமண்டல சூறாவளி Alfred, குயின்ஸ்லாந்து கடற்கரையிலிருந்து தெற்கே நகர்ந்து, மூன்றாம் வகை சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணியளவில் மெக்கேயிலிருந்து வடகிழக்கே 860...

விக்டோரியா கார் திருடர்கள் பற்றி வெளியான ஒரு ஆச்சரியமான ரகசியம்

விக்டோரியா மாநிலத்தில் 20 வருடங்களாக நடைபெற்று வரும் தொடர் வாகனத் திருட்டுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் ஈடுபட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநிலத்தில்...

சாதனை வருவாயை ஈட்டியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம்

கடந்த டிசம்பரில் முடிவடைந்த அரையாண்டு காலத்தில் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் கிட்டத்தட்ட $1.4 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது...

புதுப்பிக்கப்பட உள்ள Virgin Australia –

Virgin Australiaவில் 25 சதவீத பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டு மறுஆய்வு வாரியத்தின் சிறப்பு ஆலோசனையின் பேரில், மத்திய நிதியமைச்சர் ஜிம்...

ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சாதனம்

நேற்று (27) காலை கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சாதனம் ஒன்று கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பிரதான...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ந்துள்ள தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள்

ஆஸ்திரேலியாவில் தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள் சுமார் 3.73 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைபெறும்...