Sportsபஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் - IPL 2024

பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் – IPL 2024

-

IPL கிரிக்கெட் தொடரில் முல்லன்பூரில் நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வ தைடே மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதர்வா தைடே 18 ஓட்டங்களிலும், அடுத்து வந்த ப்ரப்சிம்ரன் சிங் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து பேர்ஸ்டோவுடன் அணி தலைவர் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். இதில் பேர்ஸ்டோ 15 ஓட்டங்களிலும், சாம் கர்ரன் 6 ஓட்டங்களிலும், அடுத்து களம் இறங்கிய ஷஷாங் சிங் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜித்தேஷ் சர்மா மற்றும் லிவிங்ஸ்டன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதில் ஜித்தேஷ் சர்மா 29 ஓட்டங்களில் ஆட்டமிழக்க. இதையடுயடுத்து ப்ரப்சிம்ரன் சிங்கிற்கு பதிலாக இம்பேக்ட் வீரராக அசுதோஷ் சர்மா களம் புகுந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 ஓட்டங்களும், ஜித்தேஷ் சர்மா 29 ஓட்டங்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , தனுஷ் கோட்யான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடினர். தொடக்க விக்கெட்டுக்கு 56 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தனுஷ் கோட்யான் 24 ஓட்டங்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஜெய்ஸ்வால் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 18 ஓட்டங்களும் , ரியான் பராக் 18 பந்துகளில் 23 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது . பஞ்சாப் அணியின் அர்ஷிதீப் சிங் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஹெட்மயர் 2 சிக்சர்கள் பறக்க விட்டார். இதனால் ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 152 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெட்மயர் 10 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...