Perthபெர்த் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு மர்ம உடல்கள்

பெர்த் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு மர்ம உடல்கள்

-

பெர்த்தில் உள்ள வீடொன்றில் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, கோல்ஃப் லிங்க்ஸ் டிரைவில் உள்ள வீடொன்றில் இந்த இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களின் அடையாளம் அல்லது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸில் கண்டெய்னர் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட அழுகிய நிலையில் இரு சடலங்களின் அடையாளத்தை இதுவரை வெளியிட முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், உடல்கள் மிகவும் சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் பொலிசார் மரண விசாரணை அதிகாரிக்கு அறிக்கை தயாரிக்க உள்ளனர், அவர் தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.

கன்டெய்னரில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களை இதுவரை காவல்துறையால் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காண முடியவில்லை.

இந்த இரண்டு சடலங்களும் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் சடலங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் குறிப்பிட்ட சாட்சிகள் எவரையும் பொலிஸார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...