Cinemaசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள 'ஏழு கடல் ஏழு மலை'

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’

-

இயக்குநர் ராம் நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது V House Productions சார்பில் தயாரிக்கிறார்.

கதாநாயகியாக அஞ்சலி நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், 46-வது மொஸ்கோ சர்வதேச திரைப்பட விழா வரும் 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் திரையிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் இந்த ஆண்டு திரையிடப்படும் முதல் தமிழ் படம் இதுவாகும்.முன்னதாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் “Limelight” பிரிவில் திரையிட ‘விடுதலை’ , மற்றும் ‘ஜிகர்தண்டா Double X’ படங்கள் தேர்வாகியமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

விக்டோரியாவில் ஆரம்பமானது Ski சீசன்

விக்டோரியாவின் Ski சீசன் இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. விக்டோரியாவின் Alpine பகுதியில் உள்ள விருப்பமான ski lodgesல் ஒன்றில் தங்கி இந்த அனுபவத்தை அனுபவிக்க,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

கருப்பை புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஒரு முறையை உருவாக்கிய மெல்பேர்ண் ஆய்வகம்

கருப்பை புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் உலகின் முதல் இரத்தப் பரிசோதனை மெல்பேர்ணில் உள்ள ஒரு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் American Society of Clinical...