Sports6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது டெல்லி அணி - IPL...

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது டெல்லி அணி – IPL 2024

-

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் தொடக்க வீரர்களாக சஹா, சுப்மன் கில் (தலைவர்) களமிறங்கினர். கில் 8 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். சஹா 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அடுத்துவந்த சாய் சுதர்சன் 12 ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் 2 ஓட்டங்களுடனும், அபினவ் மனோகர் 8 ஓட்டங்களுடனும், ஷாருக் கான் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் (0) ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி 8.4 ஓவரில் 48 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. ராகுல் திவேதியா 10 ஓட்டங்களுடனும், மோகித் சர்மா 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய ரஷித் கான் அதிகபட்சமாக 23 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இறுதியில் 17.3 ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களுக்கு சுருண்டது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி அடித்த குறைந்தபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.

சிறப்பாக பந்து வீசிய டெல்லி அணியின் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், ஸ்டப்ஸ் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

90 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

கடுமையான ஜாமீன் சட்டங்களைக் கோரி விக்டோரிய மக்கள் போராட்டம்

கடுமையான ஜாமீன் சட்டங்களைக் கோரி விக்டோரிய மக்கள் குழு ஒன்று போராட்டம் நடத்தியுள்ளது. பிணை முறையை மாற்றுவதற்கான வாக்குறுதியை செயல்படுத்துமாறு அவர்கள் விக்டோரியா அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளனர். விக்டோரியாவின் பெண்டிகோவில்...

ரஷ்யாவின் எச்சரிக்கைகளுக்கு நாங்கள் பயப்படவில்லை – பிரதமர் அல்பானீஸ்

ரஷ்ய எச்சரிக்கைகளுக்கு அஞ்சவில்லை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறுகிறது. உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் பணியை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

பிலிப்பைன்ஸில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி

பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுகள், சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு எதிரான பாரிய நடவடிக்கையின் போது நடந்த கொலைகளுடன் தொடர்புடையவை. ஹாங்காங்கிலிருந்து திரும்பிய...

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான விசையாழிகளைக் கொண்ட எரிசக்தி திட்டம் குறித்து விக்டோரிய மக்கள் அதிருப்தி

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான காற்றாலை விசையாழிகளைக் கொண்ட, விக்டோரியாவின் நெல்சனில் முன்மொழியப்பட்ட காற்றாலை பண்ணை திட்டம் பல தரப்பினரின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. இது பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் மற்றும்...

ஆஸ்திரேலிய மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

விசா விண்ணப்பதாரர்களுக்கு உள்துறை அமைச்சகம் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியாவிற்கு வருகையாளர் விசாவில் வந்த பிறகு மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக...

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான விசையாழிகளைக் கொண்ட எரிசக்தி திட்டம் குறித்து விக்டோரிய மக்கள் அதிருப்தி

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான காற்றாலை விசையாழிகளைக் கொண்ட, விக்டோரியாவின் நெல்சனில் முன்மொழியப்பட்ட காற்றாலை பண்ணை திட்டம் பல தரப்பினரின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது. இது பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் மற்றும்...