Sports3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி - IPL 2024

3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான சாம் கரண் – பிரப்சிம்ரன் சிங் ஒரளவு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் ஆட்டமிழந்த பின் அணியின் நிலைமை தலைகீழானது. குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கி பஞ்சாப் வீரர்கள் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். அதிலும் குறிப்பாக குஜராத அணி வீரர் சாய் கிஷோர் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடைசி கட்டத்தில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ஹர்பிரித் பாட்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடிம் அணியை சிறந்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவினார். இதில் பிரார் 12 பந்துகளில் 29 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் 20 ஓவர்களில் 142 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி பந்தில் பாட்டியா ஆட்டமிழந்தார். அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35 ஓட்டங்களை அடித்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 143 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் விருதிமான் சகா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் சகா 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து நிதானமாக ஆடிய சுப்மன் கில் 35 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் 4 ஓட்டங்களும், ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய சாய் சுதர்ஷன் 31 ஓட்டங்களும், ஓமர்சாய் 13 ஓட்டங்களும், ஷாரூக்கான் 8 ஓட்டங்களும், ரஷித் கான் 3 ஓட்டங்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

முடிவில் தேவாட்டியா 36 (18) ஓட்டங்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளும், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மீது சைபர் தாக்குதல்

சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் குறியீட்டு நூலகத்தை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். செப்டம்பர் 4, 2018 நிலவரப்படி...