Sportsபச்சை ஜெர்சி கை கொடுக்கவில்லை - ஒரு ஓட்ட வித்தியாசத்தில் RCB...

பச்சை ஜெர்சி கை கொடுக்கவில்லை – ஒரு ஓட்ட வித்தியாசத்தில் RCB தோல்வி – IPL 2024

-

கொல்கத்தாவுக்கு எதிரான ஈடன் கார்டனில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் RCB ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

டாஸ் இழந்து முதலில் பேட் செய்த கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் 14 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார்.

4.2 ஓவரில் சிராஜ் பாரிய ஷாட் அடிக்க முயன்று வெளியேறினார்.

மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரைன் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சால்ட் அண்ட் நரைனுக்குப் பிறகு கிரீஸுக்கு வந்த ரகுவன்ஷி (3), வெங்கடேஷ் ஐயர் (16) ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

அதையடுத்து, 13.1 ஓவரில் ரிங்கு சிங் (24) ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து அரை சதத்தை பூர்த்தி செய்தார். ஆனால், உடனே அவுட்டாகி வெளியேறினார்.

இறுதியில் ஆண்ட்ரே ரசல் (27), ரமன்தீப் சிங் (24) ஆகியோர் சிறப்பாக ஆட, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 222 ஓட்டங்கள் எடுத்தது.

பெங்களூரு அணிக்கு 223 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அபார இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி தொடக்கத்தில் தடுமாறியது. விராட் கோலி (18), டுபிளெசிஸ் (7) பவர் பிளே முடிவதற்குள் பெவிலியன் சேர்ந்தனர்.  

மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி (18) ஆட்டமிழந்தார். நான்காவது ஓவரின் முதல் பந்தில் டுபிளெசிஸும் ஆட்டமிழந்தார்.

பிறகு வந்த ஜாக்ஸ் (55), ரஜத் (52) அதிரடியாக விளையாடினர். இருவரும் தலா அரை சதம் அடித்து அணிக்கு அபார எண்ணிக்கையை பெற்று தந்தனர்.

ஆனால் 12வது ஓவரிலிருந்தே RCB போராடத் தொடங்கியது. கொல்கத்தா அணிக்கு ஆர்சிபி இரண்டு ஓவரில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

2வது ஓவரின் முதல் பந்தில் ஜாக்ஸ் (55) அவுட்டாக, ரஜத் (52) ஹர்ஷத்திடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் அடைந்தார். 13வது ஓவரின் மூன்றாவது பந்தில் கிரீன் (6), கடைசி பந்தில் லாம்ரார் (4) ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த பிரபு தேசாய் (24), தினேஷ் கார்த்திக் (25) ஆகியோர் உற்சாகத்துடன் களமிறங்கினர்.

18வது ஓவரில் இரண்டாவது பந்தில் பிரபு தேசாய் அவுட் ஆனதால் பெங்களூரு அணி மீண்டும் சந்தேகத்தில் ஆழ்ந்தது. ஆனால் 19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆனதால் ஆட்டம் பரபரப்பானது.

இறுதியில், இரண்டு பந்துகளில் மூன்று ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தபோது தான், அந்த இருநாட்டு பந்துகளிலும் அடுத்தடுத்து கரண் சர்மா, பெர்குசன் விக்கெட்டுகளை கொல்கத்தா அணியிடம் பறிகொடுத்தனர்.

இதனால் பெங்களூரு அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்று அணிந்து வந்த பச்சை நிற ஜெர்ஸி அவர்களுக்கு வெற்றிக்கான ராசியை தேடித்தரவில்லை.

Latest news

வாகனப் பராமரிப்பைத் தவிர்க்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்

தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, 4ல் 1 ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள் தங்களது வாகன பராமரிப்பு சேவைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ஃபைண்டரின் புதிய ஆய்வில்,...

மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பான சந்தேகநபர்

விக்டோரியா மாகாணத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போன சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் மீது...

வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா

வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான வளர்ந்த நாடுகளின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா 18வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச சாலை பாதுகாப்பு தரப்படுத்தல் அறிக்கையை...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

“மேதகு” இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் நேற்று 2ம் திகதி காலமானார். அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழீழ...