Newsஇரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதி பயங்கர விபத்து

இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதி பயங்கர விபத்து

-

மலேசியாவில் இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை லுமுட்டில் ரோயல் மலேசியன் நேவியின் பயிற்சியின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சடலங்கள் அடையாளம் காண லுமுட்டில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஒரு ஹெலிகாப்டரில் 7 பேரும், மற்றொரு ஹெலிகாப்டரில் 3 பேரும் பயணம் செய்தனர்.

கடந்த மார்ச் மாதம் மலேசிய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் பயிற்சி விமானத்தின் போது ஆங்சா தீவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானி, துணை விமானி மற்றும் இரண்டு பயணிகள் மீனவர்களால் மீட்கப்பட்டனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...