Sydneyபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் 7 சிறார்கள் கைது

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் 7 சிறார்கள் கைது

-

சிட்னி தேவாலயத்தில் பிஷப் ஒருவரை கத்தியால் குத்தியதையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 7 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை மற்றும் ஃபெடரல் பொலிசார் கடந்த வாரம் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட ஏழு சிறார்களை தேவாலயத்தில் கத்தியால் குத்திய முக்கிய சந்தேக நபருடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்தனர்.

இந்த சந்தேக நபர்கள் அனைவரும் மத தீவிரவாத சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த கைதுகளின் போது கணிசமான அளவு தடை செய்யப்பட்ட பொருட்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மாநில காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

நேற்று கைது செய்யப்பட்ட 15 வயதுடைய சந்தேகநபர் நாளை சிறுவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு வாலிபர்களில் 6 பேர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில போலீஸ், பெடரல் போலீஸ், ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு மற்றும் குற்றவியல் கமிஷன் உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு குழு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...