Sydneyபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் 7 சிறார்கள் கைது

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் 7 சிறார்கள் கைது

-

சிட்னி தேவாலயத்தில் பிஷப் ஒருவரை கத்தியால் குத்தியதையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 7 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை மற்றும் ஃபெடரல் பொலிசார் கடந்த வாரம் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட ஏழு சிறார்களை தேவாலயத்தில் கத்தியால் குத்திய முக்கிய சந்தேக நபருடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்தனர்.

இந்த சந்தேக நபர்கள் அனைவரும் மத தீவிரவாத சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த கைதுகளின் போது கணிசமான அளவு தடை செய்யப்பட்ட பொருட்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மாநில காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

நேற்று கைது செய்யப்பட்ட 15 வயதுடைய சந்தேகநபர் நாளை சிறுவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு வாலிபர்களில் 6 பேர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில போலீஸ், பெடரல் போலீஸ், ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு மற்றும் குற்றவியல் கமிஷன் உறுப்பினர்கள் அடங்கிய கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு குழு இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

Latest news

மத்திய அரசின் பட்ஜெட்டில் புதிய நம்பிக்கை

அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் புதிய வீடுகள் கட்ட கூடுதல் முதலீடாக பல பில்லியன் டாலர்களை மத்திய அரசு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள்...

33 சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு – கடற்படையினரால் கைது

சட்டவிரோத அகதிகள் என சந்தேகிக்கப்படும் 33 பேரை ஏற்றிச் சென்ற படகு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது. வியாழன் அதிகாலை மோசமான வானிலை காரணமாக புலம்பெயர்ந்த...

வெள்ளை ரொட்டி பாக்கெட்டுகளில் காணப்பட்ட எலியின் உடல் பாகங்கள்

சில ரொட்டிகளில் எலி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஜப்பானிய உணவு நிறுவனம் ஒன்று, ஒரு பிரபலமான பிராண்டின் 100,000 க்கும் மேற்பட்ட துண்டுகளாக்கப்பட்ட வெள்ளை ரொட்டி...

குற்றவாளிகளை கைது செய்யும் போது இருமுறை யோசிக்குமாறு குயின்ஸ்லாந்து காவல்துறைக்கு அறிவிப்பு

குற்றவாளிகளை கைது செய்யும் போது மறுபரிசீலனை செய்யுமாறு குயின்ஸ்லாந்து காவல்துறை தனது அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. முக்கியமாக பிரிஸ்பேன் கண்காணிப்பு இல்லத்தில் குழாய் உடைந்ததன் காரணமாக சந்தேக நபர்களை...

வெள்ளை ரொட்டி பாக்கெட்டுகளில் காணப்பட்ட எலியின் உடல் பாகங்கள்

சில ரொட்டிகளில் எலி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஜப்பானிய உணவு நிறுவனம் ஒன்று, ஒரு பிரபலமான பிராண்டின் 100,000 க்கும் மேற்பட்ட துண்டுகளாக்கப்பட்ட வெள்ளை ரொட்டி...

குற்றவாளிகளை கைது செய்யும் போது இருமுறை யோசிக்குமாறு குயின்ஸ்லாந்து காவல்துறைக்கு அறிவிப்பு

குற்றவாளிகளை கைது செய்யும் போது மறுபரிசீலனை செய்யுமாறு குயின்ஸ்லாந்து காவல்துறை தனது அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. முக்கியமாக பிரிஸ்பேன் கண்காணிப்பு இல்லத்தில் குழாய் உடைந்ததன் காரணமாக சந்தேக நபர்களை...