Sydneyசிட்னி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு விமானத்தில் ஓடிச் சென்று ஏற முயன்ற...

சிட்னி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு விமானத்தில் ஓடிச் சென்று ஏற முயன்ற நபர் கைது

-

சிட்னி விமான நிலையத்தின் பாதுகாப்பு உத்தரவை மீறி ஓடுபாதைக்கு அருகில் ஓடி விமானத்தில் ஏற முயன்ற 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிடைத்த அழைப்பின் பிரகாரம், அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த 30 வயதுடைய நபர், பாதுகாப்புப் பகுதியினூடாக ஓடிச்சென்று தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை நோக்கிச் செல்லும் விமானத்தின் சரக்கு பெட்டிக்குள் அவர் நுழைய முற்பட்டதாகவும், பயணப் பொதிகளை கையாளுபவர்கள் தலையிட்டதையடுத்து, சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த நபர் மனநல பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார், மேலும் விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது விசாரணை நடத்தப்படும்.

அவர் மீது வேறு எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை என்றும், அடுத்த 12 மாதங்களுக்கு சிட்னி சர்வதேச விமான நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...