Sportsமும்பையை வீழ்த்தி வென்றது லக்னோ - IPL 2024

மும்பையை வீழ்த்தி வென்றது லக்னோ – IPL 2024

-

ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

மும்பை அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா (4 ஓட்டங்களுக்கும்) மற்றும் இஷான் கிஷன் (32 ஓட்டங்களுக்கும்) வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால், மும்பை அணி 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தவித்தது. இந்த நிலையில், களமிறங்கிய நேஹல் வதீரா நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடி 46 ஓட்டங்கள் பெற்று பின் ஆட்டமிழந்தார்.

மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா (0) முதல் பந்திலேயே அவுட் ஆனது அணியினருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. முடிவில், மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

சுலபமான இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி (0) முதல் ஓவரிலேயே அவுட் ஆனார்.

ஆனால், கேப்டன் கே.எல். ராகுல் (28 ஓட்டங்களும்) மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (62 ஓட்டங்களும்) எடுத்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு நடத்தினர். ஸ்டோய்னிஸ் 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இதன் மூலம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...