Sportsமும்பையை வீழ்த்தி வென்றது லக்னோ - IPL 2024

மும்பையை வீழ்த்தி வென்றது லக்னோ – IPL 2024

-

ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

மும்பை அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா (4 ஓட்டங்களுக்கும்) மற்றும் இஷான் கிஷன் (32 ஓட்டங்களுக்கும்) வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால், மும்பை அணி 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தவித்தது. இந்த நிலையில், களமிறங்கிய நேஹல் வதீரா நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடி 46 ஓட்டங்கள் பெற்று பின் ஆட்டமிழந்தார்.

மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா (0) முதல் பந்திலேயே அவுட் ஆனது அணியினருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. முடிவில், மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

சுலபமான இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு தொடக்க வீரர் அர்ஷின் குல்கர்னி (0) முதல் ஓவரிலேயே அவுட் ஆனார்.

ஆனால், கேப்டன் கே.எல். ராகுல் (28 ஓட்டங்களும்) மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (62 ஓட்டங்களும்) எடுத்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு நடத்தினர். ஸ்டோய்னிஸ் 44 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இதன் மூலம், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Latest news

சிறந்த விமானக் குழுவிற்கான முதல் இடம் ஆஸ்திரியாவுக்கு செல்கிறது

ஐரோப்பாவின் சிறந்த விமானக் குழு தரவரிசையில் ஆஸ்திரியாவின் விமானப் பணியாளர்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். இந்த தரவரிசை 2023 ஆம் ஆண்டிற்கான செய்யப்பட்டது மற்றும் ஏர் பிரான்ஸ்...

உங்கள் வீட்டில் கல்நார் இருந்தால் அவதானமாக இருங்கள்

நாட்டில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதில் கல்நார் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு மூன்றாவது வீட்டிற்கும் கல்நார் இன்னும் பயன்படுத்தப்படுகிறது என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்நார் ஒழிப்பு கவுன்சிலின்...

வட்டி விகித உயர்வு அபாயம் பற்றி அறிக்கை

கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் வரவு செலவுத் திட்டமானது வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என பல அவுஸ்திரேலியர்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்ஜெட் சிறப்பாக...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் இறுதிச்சடங்கு இன்று

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன. விபத்தில் உயிரிழந்த அதிபர் உள்ளிட்டோருக்கு 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்...

வட்டி விகித உயர்வு அபாயம் பற்றி அறிக்கை

கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் வரவு செலவுத் திட்டமானது வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என பல அவுஸ்திரேலியர்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்ஜெட் சிறப்பாக...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் இறுதிச்சடங்கு இன்று

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன. விபத்தில் உயிரிழந்த அதிபர் உள்ளிட்டோருக்கு 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்...