Sports4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு - IPL 2024

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு – IPL 2024

-

IPL தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் தலைவர் போப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் விருத்திமான் சஹா 1 ஓட்டத்துடனும், சுப்மன் கில் 2 ஓட்டங்களிலும், சாய் சுதர்சன் 6 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் கை கோர்த்த ஷாருக்கான் – மில்லர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருவரும் இணைந்து 56 ஓட்டங்கள் பெற்ற நிலையில் மில்லர் 30 ஓட்டங்களிலும், ஷாருக்கான் 37 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய திவேட்டியா அதிரடியாக விளையாடினார். இதனிடையே ரஷித் கான் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய திவேட்டியா 21 பந்துகளில் 35 ஓட்டங்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

குஜராத் 19.3 ஓவர்களில் 147 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாருக்கான் 37 ஓட்டங்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக சிராஜ், யாஷ் தயாள், வைஷாக் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 148 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய டு பிளெசிஸ், அதிரடியில் மிரட்டினார். 18 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். விராட் கோலி நிதானமாக விளையாடினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 92 ஓட்டங்கள் சேர்த்தது.

டு பிளெசிஸ் 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வில் ஜேக்ஸ் (1), படிதார் (2), மேக்ஸ்வெல் (4), கிரீன் (1) அடுத்தடுத்து நடையை கட்டினர். சிறிது நேரத்தில் கோலியும் (42) வெளியேற 117 ஓட்டங்களில் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

எனினும் கார்த்திக் மற்றும் ஸ்வப்னில் சிங் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். இறுதியில் பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து இலக்கை கடந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Latest news

Facebook மற்றும் Instagram பற்றிய ஒரு சிறப்பு சோதனை

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு குழந்தைகள் அடிமையாகி வருகின்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் வியாழக்கிழமை முறையான விசாரணையை தொடங்கியுள்ளது. டிஜிட்டல் சேவைகள்...

ஆஸ்திரேலியர்களில் 6 பேரில் ஒருவர் ஊனமுற்றவர் என கருத்துகணிப்பு

மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆறு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஊனமுற்றவர். இது மொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 4.4 மில்லியன் என...

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக அடிப்படை நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுரை

லெப்டினன்ட் ஜெனரல் Mechel McGuinness, சைபர் செக்யூரிட்டி தலைவர், MediSecure இ-ப்ரிஸ்கிரிப்ஷன் நிறுவனத்திற்கு எதிரான தனிப்பட்ட தரவுகளுக்கு எதிரான குற்றச்சாட்டு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று...

தெற்கு ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக அரசாங்க கட்டணங்கள் உயர்வு

தெற்கு ஆஸ்திரேலியாவில் அரசு சேவைகளுக்குப் பொருந்தும் தொடர் கட்டணங்கள் ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட உள்ளன. தெற்கு ஆஸ்திரேலிய பொருளாளர் ஸ்டீபன் முல்லிகன் நேற்று செய்தியாளர் சந்திப்பில்...

உலகில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட 10 நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலிய நகரம்

உலகில் அதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் 10 நகரங்களில் ஆஸ்திரேலியாவின் சிட்னியும் இடம் பெற்றுள்ளது. உலகின் மொத்த மக்கள்தொகையில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட 10 நகரங்களின் பெயர்களை உலக...

ஆஸ்திரேலியர்களில் 6 பேரில் ஒருவர் ஊனமுற்றவர் என கருத்துகணிப்பு

மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆறு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் ஊனமுற்றவர். இது மொத்த ஆஸ்திரேலிய மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது 4.4 மில்லியன் என...