பெர்த்தில் நேற்று இரவு வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றிரவு பதிவாகியுள்ளதாகவும், அது தொடர்பான தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்றிரவு நகரின் தெற்கே வில்லெட்டனில் உள்ள ஹை ரோட்டில் அவசரகால சேவைகள் உட்பட 30க்கும் மேற்பட்ட ரோந்து கார்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இன்று காலை ஹை ரோட் மேற்கு நோக்கி செல்லும் வீதி யாம்பி ஒய் மற்றும் லீச் ஐவ் இடையே மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பெர்த் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.