Sportsலக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா - IPL 2024

லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன் – சால்ட் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினர். முதல் விக்கெட்டுக்கு 61 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில் அதிரடியாக விளையாடிய சால்ட் 32 ஓட்டங்களில் (14 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

பின்னர் ரகுவன்ஷி – சுனில் நரைன் ஜோடி சேர்ந்தனர். இதில் ரகுவன்ஷி நிதான ஆட்டத்தை கடைபிடிக்க மறுமுனையில் சுனில் நரைன் அதிரடியாக விளையாடினார். லக்னோ பந்து வீச்சை வெளுத்து வாங்கிய அவர் 39 பந்துகளில் 81 ஓட்டங்கள் அடித்த நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய ரசல் 12 ஓட்டங்களிலும், நிதானமாக விளையாடிய ரகுவன்ஷி 32 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ரிங்கு சிங் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார்.

கடைசி கட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரமன்தீப் சிங் அதிரடியாக விளையாடி அணி வலுவான நிலையை எட்ட உதவினர். ஸ்ரேயாஸ் 15 பந்துகளில் 23 ஓட்டங்கள் அடித்த நிலையில் ஆட்டமிழக்க ரமன்தீப் சிங் 6 பந்துகளில் 25 ஓட்டங்கள் அடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 81 ஓட்டங்கள் அடித்தார். லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 236 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி 16.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. அதன்படி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...