Sportsலக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா - IPL 2024

லக்னோவை வீழ்த்தியது கொல்கத்தா – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன் – சால்ட் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினர். முதல் விக்கெட்டுக்கு 61 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில் அதிரடியாக விளையாடிய சால்ட் 32 ஓட்டங்களில் (14 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

பின்னர் ரகுவன்ஷி – சுனில் நரைன் ஜோடி சேர்ந்தனர். இதில் ரகுவன்ஷி நிதான ஆட்டத்தை கடைபிடிக்க மறுமுனையில் சுனில் நரைன் அதிரடியாக விளையாடினார். லக்னோ பந்து வீச்சை வெளுத்து வாங்கிய அவர் 39 பந்துகளில் 81 ஓட்டங்கள் அடித்த நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து களமிறங்கிய ரசல் 12 ஓட்டங்களிலும், நிதானமாக விளையாடிய ரகுவன்ஷி 32 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ரிங்கு சிங் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார்.

கடைசி கட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரமன்தீப் சிங் அதிரடியாக விளையாடி அணி வலுவான நிலையை எட்ட உதவினர். ஸ்ரேயாஸ் 15 பந்துகளில் 23 ஓட்டங்கள் அடித்த நிலையில் ஆட்டமிழக்க ரமன்தீப் சிங் 6 பந்துகளில் 25 ஓட்டங்கள் அடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 81 ஓட்டங்கள் அடித்தார். லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 236 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி 16.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. அதன்படி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

Latest news

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...