Newsயாழ்ப்பாணத்தில் தாயைக் கொன்றுவிட்டு “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த...

யாழ்ப்பாணத்தில் தாயைக் கொன்றுவிட்டு “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த சிறுவன்

-

யாழ். தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், தாயை தானே கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தெல்லிப்பளை, துர்க்காபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 4ஆம் திகதி இரவு இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

கெனடி ஜஸ்மின் (37) என்ற 2 பிள்ளைகளின் தாயார் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவரது 16 வயதான மகன் காணாமல் போயிருந்தார். அவர் உளநலச்சிக்கல்களுக்கு உள்ளானவர் என்றும் கையடக்க தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையானவர். கையடக்க தொலைபேசியை தருமாறு அடிக்கடி வீட்டில் சண்டையிடுவதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் வாய், மூக்கால் இரத்தம் வெளியேறியிருந்தது. இரத்தத்தினால். Im killing family உள்ளிட்ட சில வாசகங்கள் வீட்டு சுவரில் எழுதப்பட்டிருந்தன.

குறிப்பிட்ட சிறுவன், கொலை மற்றும் தற்கொலை தொடர்பான குறிப்புக்களை சேகரித்து வைத்திருந்ததை, வீட்டில் சோதனையிட்ட பொலிசார் கண்டறிந்தனர்.

சம்பவ தினத்தன்றும் கையடக்க தொலைபேசிக்காக சிறுவன் சன்டையிட்டுவிட்டு பின்னர், சிறுவன் கத்தி, மற்றும் ஊசியை தனது படுக்கையில் வைத்திருந்ததை அவதானித்ததால், அவரது சகோதரியை அன்று இரவு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு தாயார் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் காணாமல் போன சிறுவன் நேற்று தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்கு சென்று தானே தாயாரை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்.

தாயார் தூக்க மாத்திரைகளை பாவித்து விட்டு உறக்கத்தில் இருந்த போது, அவரது கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்தார்.

கொலையின் பின்னர் கொழும்புக்கு பஸ்ஸில் சென்றதாகவும், அங்கு இறங்கி சிறிது நேரம் உட்கார்ந்திருந்து விட்டு, மறுபடியும் பஸ்ஸில் ஏறி யாழ்ப்பாணம் சென்று, தெல்லிப்பளை வந்ததாகவும் தெரிவித்துள்ளார். வீட்டுக்கு சென்றபோது, தாயாரின் கண்ணீர் அஞ்சலி பதாதைகள் கட்டப்பட்டிருப்பதை பார்த்து விட்டு, நேராக பொலிஸ் நிலையம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவன் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அச்சுவேலியிலுள்ள சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Latest news

மாநில கடற்கரையில் நச்சுப் பாசிகள் இருப்பது குறித்து எச்சரிக்கை

தெற்கு ஆஸ்திரேலியாவில் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கடற்கரைகளுக்குச் செல்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். தெற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் நச்சுப் பாசிகள் (toxic...

விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு

Kandla விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட SpiceJet விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு நிலவியது. குஜராத்தின் Kandlaவில் இருந்து 80 பயணிகளுடன் SpiceJet விமானம் மும்பைக்கு புறப்பட்டவுடன்...

Charlie Kirk-இன் குழந்தைகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்ட எலோன் மஸ்க்

Charlie Kirk-இன் மரணத்தைத் தொடர்ந்து, எலோன் மஸ்க், Kirk-இன் குழந்தைகளின் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் கல்விச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். Utta பல்கலைக்கழகத்தில் எதிர்பாராத விதமாக...

ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களின் பணிநீக்கங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும்?

ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இரண்டில் இந்த வாரம் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 மாதங்களில் வருவாயை அதிகரிக்கவும், இயக்கச் செலவுகளை சமாளிக்கவும், பணியாளர் மாற்றங்களை...

ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களின் பணிநீக்கங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும்?

ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இரண்டில் இந்த வாரம் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 மாதங்களில் வருவாயை அதிகரிக்கவும், இயக்கச் செலவுகளை சமாளிக்கவும், பணியாளர் மாற்றங்களை...

இன்றும் அடுத்த வாரமும் மாற்றமடையும் மெல்பேர்ண் பேருந்து சேவை அட்டவணைகள்

மெல்பேர்ணில் நேற்றும் அடுத்த வாரமும் பேருந்து சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று CDC விக்டோரியா அறிவித்துள்ளது. சுயாதீன போக்குவரத்து சங்கம் நேற்று முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்தைத்...