Newsயாழ்ப்பாணத்தில் தாயைக் கொன்றுவிட்டு “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த...

யாழ்ப்பாணத்தில் தாயைக் கொன்றுவிட்டு “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த சிறுவன்

-

யாழ். தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், தாயை தானே கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தெல்லிப்பளை, துர்க்காபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 4ஆம் திகதி இரவு இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

கெனடி ஜஸ்மின் (37) என்ற 2 பிள்ளைகளின் தாயார் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவரது 16 வயதான மகன் காணாமல் போயிருந்தார். அவர் உளநலச்சிக்கல்களுக்கு உள்ளானவர் என்றும் கையடக்க தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையானவர். கையடக்க தொலைபேசியை தருமாறு அடிக்கடி வீட்டில் சண்டையிடுவதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் வாய், மூக்கால் இரத்தம் வெளியேறியிருந்தது. இரத்தத்தினால். Im killing family உள்ளிட்ட சில வாசகங்கள் வீட்டு சுவரில் எழுதப்பட்டிருந்தன.

குறிப்பிட்ட சிறுவன், கொலை மற்றும் தற்கொலை தொடர்பான குறிப்புக்களை சேகரித்து வைத்திருந்ததை, வீட்டில் சோதனையிட்ட பொலிசார் கண்டறிந்தனர்.

சம்பவ தினத்தன்றும் கையடக்க தொலைபேசிக்காக சிறுவன் சன்டையிட்டுவிட்டு பின்னர், சிறுவன் கத்தி, மற்றும் ஊசியை தனது படுக்கையில் வைத்திருந்ததை அவதானித்ததால், அவரது சகோதரியை அன்று இரவு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு தாயார் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் காணாமல் போன சிறுவன் நேற்று தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்கு சென்று தானே தாயாரை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலமளித்துள்ளார்.

தாயார் தூக்க மாத்திரைகளை பாவித்து விட்டு உறக்கத்தில் இருந்த போது, அவரது கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்தார்.

கொலையின் பின்னர் கொழும்புக்கு பஸ்ஸில் சென்றதாகவும், அங்கு இறங்கி சிறிது நேரம் உட்கார்ந்திருந்து விட்டு, மறுபடியும் பஸ்ஸில் ஏறி யாழ்ப்பாணம் சென்று, தெல்லிப்பளை வந்ததாகவும் தெரிவித்துள்ளார். வீட்டுக்கு சென்றபோது, தாயாரின் கண்ணீர் அஞ்சலி பதாதைகள் கட்டப்பட்டிருப்பதை பார்த்து விட்டு, நேராக பொலிஸ் நிலையம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவன் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அச்சுவேலியிலுள்ள சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் ஆபத்தில் உள்ள இளைஞர் குழுக்கள்

பயங்கரவாத ஆட்சேர்ப்பு செய்பவர்களால் இளம் ஆஸ்திரேலியர்கள் எப்படி தீவிர சித்தாந்தங்களுக்குள் புகுத்தப்படுகிறார்கள் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய இளைஞர்களின் தீவிரமயமாக்கல் பயங்கரவாத நடவடிக்கைகளில்...

விக்டோரியா மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டு வர பிரதமர் தயார்

சில்லறை விற்பனை கடைகள், விருந்தோம்பல் அல்லது போக்குவரத்து போன்ற சேவைகளின் வாடிக்கையாளர்களால் சேவைகளை வழங்கும் ஊழியர்களை துன்புறுத்தும் சம்பவங்களுக்கு எதிராக விக்டோரியா அரசாங்கம் புதிய சட்டங்களை...

வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குயின்ஸ்லாந்து வீட்டுவசதி நெருக்கடியின் நடுவே உள்ளது, வாடகைதாரர்கள்...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...

மெல்போர்ன் மாநாட்டை தாக்கிய எதிர்ப்பாளர்களுக்கு கண்டனம்

மெல்போர்னில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி மாநாட்டை தாக்கியதற்கு மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...