Sports7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்திய மும்பை - IPL 2024

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்திய மும்பை – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். வழக்கமாக அதிரடியில் பட்டையை கிளப்பும் அபிஷேக் சர்மா இந்த முறை மும்பை பந்து வீச்சில் திணறினார். மறுமுனையில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார்.

தொடக்கம் முதலே தடுமாறிய அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், மயங்க் அகர்வால் 5 ரன்களிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். வழக்கமாக அதிரடியில் வெளுத்து வாங்கும் ஐதராபாத் வீரர்கள் இந்த போட்டியில் மும்பை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். பின்னர் களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 20 ரன்களிலும், கிளாசென் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

மறுமுனையில் நிலைத்து விளையாடிய டிராவிஸ் ஹெட் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சபாஸ் அகமது 10 ரன்களிலும், அப்துல் சமத் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் மட்டும் பொறுப்புடன் விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். அவர் 17 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் ஐதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 174 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணி 17.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...