Sports7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்திய மும்பை - IPL 2024

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்திய மும்பை – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். வழக்கமாக அதிரடியில் பட்டையை கிளப்பும் அபிஷேக் சர்மா இந்த முறை மும்பை பந்து வீச்சில் திணறினார். மறுமுனையில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார்.

தொடக்கம் முதலே தடுமாறிய அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், மயங்க் அகர்வால் 5 ரன்களிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். வழக்கமாக அதிரடியில் வெளுத்து வாங்கும் ஐதராபாத் வீரர்கள் இந்த போட்டியில் மும்பை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். பின்னர் களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 20 ரன்களிலும், கிளாசென் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

மறுமுனையில் நிலைத்து விளையாடிய டிராவிஸ் ஹெட் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சபாஸ் அகமது 10 ரன்களிலும், அப்துல் சமத் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் மட்டும் பொறுப்புடன் விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். அவர் 17 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் ஐதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 174 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணி 17.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...