Sports7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்திய மும்பை - IPL 2024

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்திய மும்பை – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். வழக்கமாக அதிரடியில் பட்டையை கிளப்பும் அபிஷேக் சர்மா இந்த முறை மும்பை பந்து வீச்சில் திணறினார். மறுமுனையில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார்.

தொடக்கம் முதலே தடுமாறிய அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், மயங்க் அகர்வால் 5 ரன்களிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். வழக்கமாக அதிரடியில் வெளுத்து வாங்கும் ஐதராபாத் வீரர்கள் இந்த போட்டியில் மும்பை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். பின்னர் களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 20 ரன்களிலும், கிளாசென் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

மறுமுனையில் நிலைத்து விளையாடிய டிராவிஸ் ஹெட் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சபாஸ் அகமது 10 ரன்களிலும், அப்துல் சமத் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் மட்டும் பொறுப்புடன் விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். அவர் 17 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் ஐதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 174 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணி 17.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...