Sports7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்திய மும்பை - IPL 2024

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்திய மும்பை – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். வழக்கமாக அதிரடியில் பட்டையை கிளப்பும் அபிஷேக் சர்மா இந்த முறை மும்பை பந்து வீச்சில் திணறினார். மறுமுனையில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார்.

தொடக்கம் முதலே தடுமாறிய அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், மயங்க் அகர்வால் 5 ரன்களிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். வழக்கமாக அதிரடியில் வெளுத்து வாங்கும் ஐதராபாத் வீரர்கள் இந்த போட்டியில் மும்பை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். பின்னர் களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 20 ரன்களிலும், கிளாசென் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

மறுமுனையில் நிலைத்து விளையாடிய டிராவிஸ் ஹெட் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சபாஸ் அகமது 10 ரன்களிலும், அப்துல் சமத் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் மட்டும் பொறுப்புடன் விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். அவர் 17 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் ஐதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 174 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணி 17.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

Latest news

ஆஸ்திரேலியாவின் ஆபத்தில் உள்ள இளைஞர் குழுக்கள்

பயங்கரவாத ஆட்சேர்ப்பு செய்பவர்களால் இளம் ஆஸ்திரேலியர்கள் எப்படி தீவிர சித்தாந்தங்களுக்குள் புகுத்தப்படுகிறார்கள் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய இளைஞர்களின் தீவிரமயமாக்கல் பயங்கரவாத நடவடிக்கைகளில்...

விக்டோரியா மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டு வர பிரதமர் தயார்

சில்லறை விற்பனை கடைகள், விருந்தோம்பல் அல்லது போக்குவரத்து போன்ற சேவைகளின் வாடிக்கையாளர்களால் சேவைகளை வழங்கும் ஊழியர்களை துன்புறுத்தும் சம்பவங்களுக்கு எதிராக விக்டோரியா அரசாங்கம் புதிய சட்டங்களை...

வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குயின்ஸ்லாந்து வீட்டுவசதி நெருக்கடியின் நடுவே உள்ளது, வாடகைதாரர்கள்...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...

மெல்போர்ன் மாநாட்டை தாக்கிய எதிர்ப்பாளர்களுக்கு கண்டனம்

மெல்போர்னில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி மாநாட்டை தாக்கியதற்கு மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...