Newsபட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் - பலர் படுகாயம்

பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

-

சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட 23 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் Yunnan மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

முதலில் 10 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்றே கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர், இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 23 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பலரது நிலை கவலைக்கிடம் என்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் நூலிழையில் தப்பிய ஒருவர் தெரிவிக்கையில், காயம்பட்டவர்களில் சிலர் மருத்துவர்கள் என்றே குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தாக்குதல்தாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வெளியான காணொளிகளில், தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், பலர் பலத்த காயங்களுடன் சுருண்டுவிழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...