Newsஇளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை - உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி...

இளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை – உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி டயானாவின் உறவினர்கள்

-

பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் புறக்கணித்த நிலையில், ஹரிக்கு ஆதரவாக நிற்க, இளவரசி டயானாவின் சகோதரரும் சகோதரியும் ஓடோடிவந்த சம்பவம் நேற்று நிகழ்ந்தது.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்தைப் பிரிந்து அமெரிக்கா சென்ற நிலையில், அவர்கள் இருவரும் ராஜ குடும்பத்தை தொடர்ந்து அவமதித்துவந்தார்கள். அதைத் தொடர்ந்து, ஹரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

மன்னர் சார்லசுக்கும், இளவரசி கேட்டுக்கும் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட பின்னராவது குடும்பம் ஒன்றிணையும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்துள்ளார் இளவரசர் ஹரி. அவர் தன் தந்தையான மன்னர் சார்லசை சந்திப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிசியாக இருப்பதால் ஹரியை சந்திக்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டதால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

ஆனால், ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் கைவிட்ட நிலையில், அவர் இல்லையென்றால் என்ன, நாங்கள் இருக்கிறோம் என உதவிக்கு ஓடோடிவந்துள்ளது ஹரியின் தாயான இளவரசி டயானாவின் குடும்பம்.

Latest news

விக்டோரியாவில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் – இருவர் பலி

விக்டோரியாவில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரண்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. விக்டோரியாவின் யர்ராவோங்காவில் 46 வயது பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஓட்டிச் சென்ற...

பழங்குடி சமூகத்திற்கு அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை

வடக்குப் பிரதேசத்தின் பிஞ்சாரி பகுதியில் பழங்குடி சமூகத்தினருக்கு வீடுகள் கட்டித் தருவதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மார்ச் 2024 இல் அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை...

பட்டினியால் வாடும் 50,000 ஆஸ்திரேலியர்கள்

ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 50,000 ஆஸ்திரேலியர்கள் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. OzHarvest என்ற தொண்டு நிறுவனம் சமீபத்தில் நடத்திய...

விக்டோரியன் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்

விக்டோரியாவின் Mornington தீபகற்பத்தில் உள்ள Cape Schanck பகுதியில் ஒரு மனித உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இறந்த ஒருவருடையது...

போராட்டக்காரர்கள் சீர்குலைத்த மெல்பேர்ண் அன்சாக் கொண்டாட்டங்கள்

ஆயுதப் படைகளில் பணியாற்றிய அனைவரின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் நேற்று அன்சாக் தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன. மாநில தலைநகரங்களிலும் ஆஸ்திரேலிய போர் நினைவுச்...

மீண்டும் மது அருந்த மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதியளித்த சிட்னி குற்றவாளி 

மதுவுக்கு அடிமையான ஒருவர், தனது மனைவியைக் கொன்றதற்காக சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு, மீண்டும் ஒருபோதும் மது அருந்த மாட்டேன் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில்,...