Newsஇளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை - உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி...

இளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை – உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி டயானாவின் உறவினர்கள்

-

பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் புறக்கணித்த நிலையில், ஹரிக்கு ஆதரவாக நிற்க, இளவரசி டயானாவின் சகோதரரும் சகோதரியும் ஓடோடிவந்த சம்பவம் நேற்று நிகழ்ந்தது.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்தைப் பிரிந்து அமெரிக்கா சென்ற நிலையில், அவர்கள் இருவரும் ராஜ குடும்பத்தை தொடர்ந்து அவமதித்துவந்தார்கள். அதைத் தொடர்ந்து, ஹரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

மன்னர் சார்லசுக்கும், இளவரசி கேட்டுக்கும் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட பின்னராவது குடும்பம் ஒன்றிணையும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்துள்ளார் இளவரசர் ஹரி. அவர் தன் தந்தையான மன்னர் சார்லசை சந்திப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிசியாக இருப்பதால் ஹரியை சந்திக்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டதால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

ஆனால், ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் கைவிட்ட நிலையில், அவர் இல்லையென்றால் என்ன, நாங்கள் இருக்கிறோம் என உதவிக்கு ஓடோடிவந்துள்ளது ஹரியின் தாயான இளவரசி டயானாவின் குடும்பம்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...