Newsஇளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை - உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி...

இளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை – உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி டயானாவின் உறவினர்கள்

-

பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் புறக்கணித்த நிலையில், ஹரிக்கு ஆதரவாக நிற்க, இளவரசி டயானாவின் சகோதரரும் சகோதரியும் ஓடோடிவந்த சம்பவம் நேற்று நிகழ்ந்தது.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்தைப் பிரிந்து அமெரிக்கா சென்ற நிலையில், அவர்கள் இருவரும் ராஜ குடும்பத்தை தொடர்ந்து அவமதித்துவந்தார்கள். அதைத் தொடர்ந்து, ஹரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

மன்னர் சார்லசுக்கும், இளவரசி கேட்டுக்கும் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட பின்னராவது குடும்பம் ஒன்றிணையும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்துள்ளார் இளவரசர் ஹரி. அவர் தன் தந்தையான மன்னர் சார்லசை சந்திப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிசியாக இருப்பதால் ஹரியை சந்திக்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டதால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

ஆனால், ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் கைவிட்ட நிலையில், அவர் இல்லையென்றால் என்ன, நாங்கள் இருக்கிறோம் என உதவிக்கு ஓடோடிவந்துள்ளது ஹரியின் தாயான இளவரசி டயானாவின் குடும்பம்.

Latest news

சமூக ஊடகங்களின் அச்சுறுத்தலில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற மற்றொரு முயற்சி

நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பிரச்சாரம், சமூக ஊடகங்களின் அச்சுறுத்தலில் இருந்து ஆஸ்திரேலியாவின் குழந்தைகளைக் காப்பாற்ற அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது. நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா...

அதிவேக ஆம்புலன்ஸ் சேவை கொண்ட மாநிலங்களின் பட்டியல் இதோ!

ஆஸ்திரேலியா மாநிலங்களில் அவசர அழைப்புகளுக்கு விரைவாக பதிலளிக்கும் ஆம்புலன்ஸ் சேவை பற்றிய சமீபத்திய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தெற்கு ஆஸ்திரேலிய ஆம்புலன்ஸ் சேவை...

விக்டோரியாவின் மக்கள் தொகை பற்றி வெளியான புதிய தகவல்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளரும் மாநிலமாக விக்டோரியா அடையாளம் காணப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டிற்கான புள்ளியியல் தரவுகளின்படி, மெல்போர்னின் மக்கள்தொகை 3.3 சதவீதம் அதிகரித்துள்ளது, இது விக்டோரியாவின் மற்ற பகுதிகளுடன்...

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இணையத்தில் குழந்தைகளின்...

போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்கானவரின் தாயார் அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் தாயொருவர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபரைப் போன்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல நிதி மற்றும்...

கைது செய்யப்பட்ட மெல்போர்னில் போராட்டக்காரர்கள்

மெல்போர்னின் CBD இல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு போராட்ட குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தனித்தனி கூட்டங்களிலும் சுமார்...