Sports35 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த CSK அணி - IPL 2024

35 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த CSK அணி – IPL 2024

-

நடப்பு ஐபிஎல்லின் 59வது போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் குவித்தது.

அணித்தலைவர் சுப்மன் கில் 104 (55) ஓட்டங்களும், சாய் சுதர்சன் 103 (51) ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரஹானே (1), ரச்சின் ரவீந்திரா (1), கெய்க்வாட் (0) அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அடுத்து கைகோர்த்த டேர்ல் மிட்செல், மொயீன் அலி அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர். அரைசதம் விளாசிய மிட்செல் 34 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து மொயீன் அலி 56 (36) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, CSK அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

ஷிவம் தூபே 21 ஓட்டங்களிலும், ஜடேஜா 18 ஓட்டங்களிலும் வெளியேற, எம்.எஸ்.தோனி கடைசி கட்டத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

20 ஓவர்கள் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 196 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. தோனி 11 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 26 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளும், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் சந்தீப் வாரியர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Latest news

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...