Sports35 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த CSK அணி - IPL 2024

35 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த CSK அணி – IPL 2024

-

நடப்பு ஐபிஎல்லின் 59வது போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் குவித்தது.

அணித்தலைவர் சுப்மன் கில் 104 (55) ஓட்டங்களும், சாய் சுதர்சன் 103 (51) ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரஹானே (1), ரச்சின் ரவீந்திரா (1), கெய்க்வாட் (0) அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அடுத்து கைகோர்த்த டேர்ல் மிட்செல், மொயீன் அலி அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர். அரைசதம் விளாசிய மிட்செல் 34 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து மொயீன் அலி 56 (36) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, CSK அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

ஷிவம் தூபே 21 ஓட்டங்களிலும், ஜடேஜா 18 ஓட்டங்களிலும் வெளியேற, எம்.எஸ்.தோனி கடைசி கட்டத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

20 ஓவர்கள் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 196 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. தோனி 11 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 26 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளும், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் சந்தீப் வாரியர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...