Sports35 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த CSK அணி - IPL 2024

35 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த CSK அணி – IPL 2024

-

நடப்பு ஐபிஎல்லின் 59வது போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் குவித்தது.

அணித்தலைவர் சுப்மன் கில் 104 (55) ஓட்டங்களும், சாய் சுதர்சன் 103 (51) ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரஹானே (1), ரச்சின் ரவீந்திரா (1), கெய்க்வாட் (0) அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அடுத்து கைகோர்த்த டேர்ல் மிட்செல், மொயீன் அலி அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர். அரைசதம் விளாசிய மிட்செல் 34 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து மொயீன் அலி 56 (36) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, CSK அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

ஷிவம் தூபே 21 ஓட்டங்களிலும், ஜடேஜா 18 ஓட்டங்களிலும் வெளியேற, எம்.எஸ்.தோனி கடைசி கட்டத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

20 ஓவர்கள் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 196 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. தோனி 11 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 26 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளும், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் சந்தீப் வாரியர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...