Sports35 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த CSK அணி - IPL 2024

35 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த CSK அணி – IPL 2024

-

நடப்பு ஐபிஎல்லின் 59வது போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 231 ஓட்டங்கள் குவித்தது.

அணித்தலைவர் சுப்மன் கில் 104 (55) ஓட்டங்களும், சாய் சுதர்சன் 103 (51) ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரஹானே (1), ரச்சின் ரவீந்திரா (1), கெய்க்வாட் (0) அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அடுத்து கைகோர்த்த டேர்ல் மிட்செல், மொயீன் அலி அதிரடியாக ஸ்கோரை உயர்த்தினர். அரைசதம் விளாசிய மிட்செல் 34 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்து அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து மொயீன் அலி 56 (36) ஓட்டங்களில் ஆட்டமிழக்க, CSK அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

ஷிவம் தூபே 21 ஓட்டங்களிலும், ஜடேஜா 18 ஓட்டங்களிலும் வெளியேற, எம்.எஸ்.தோனி கடைசி கட்டத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

20 ஓவர்கள் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 196 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது. தோனி 11 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 26 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் மோஹித் ஷர்மா 3 விக்கெட்டுகளும், ரஷீத் கான் 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் சந்தீப் வாரியர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Latest news

ஆஸ்திரேலியாவின் சிறந்த 10 கடற்கரைகள் எவை தெரியுமா?

2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவின் சிறந்த 10 கடற்கரைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் இடத்தை டாஸ்மேனியா கடற்கரையில் உள்ள Bay of Fires பிடித்துள்ளது . இந்த...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய குடியேறிகளின் நிலை

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய குடியேறிகள் குழு ஒன்று, அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசியுள்ளது. கடந்த புதன்கிழமை வட இந்தியாவில் நூறு இந்திய குடியேறிகளை...

கோவிட்-19ஆல் வேறு அரிய நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் COVID-19 நோயால் இறந்தவர்களில் எட்டு அரிய நோய்கள் அடையாளம் காணப்பட்டதாக லான்செட் டிஜிட்டல் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்கால தொற்றுநோய் திட்டமிடல்...

நெருக்கடியில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியாவின் சுகாதார சேவை

மேற்கு ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்குப் பதிலாக உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது. தற்போது அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்...

கோவிட்-19ஆல் வேறு அரிய நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் COVID-19 நோயால் இறந்தவர்களில் எட்டு அரிய நோய்கள் அடையாளம் காணப்பட்டதாக லான்செட் டிஜிட்டல் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்கால தொற்றுநோய் திட்டமிடல்...

வார இறுதியில் வடக்கு குயின்ஸ்லாந்தில் மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை

வார இறுதியில் வடக்கு குயின்ஸ்லாந்து மக்களுக்கு மேலும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. டவுன்ஸ்வில்லுக்கு தெற்கே ஹௌடன் ஆற்றின் குறுக்கே உள்ள கெய்ர்ன்ஸ் முதல் ராக்ஹாம்ப்டன் வரையிலான பகுதி,...