Newsஅவுஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த பயங்கரம்

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த பயங்கரம்

-

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவர் சக நண்பர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹரியானா மாநிலம் கக்சினா கிராமத்தைச் சேர்ந்த நவஜீத் சந்து (22) அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வந்தார்.

அவருடன் சில மாணவர்கள் மெல்போர்ன் நகரில் தங்கி படித்து வந்துள்ளனர். நவ்ஜீத்தின் நண்பர்களான அபிஜித் (26) மற்றும் ராபின் கார்டன் (27) இருவரும் அவருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சகோதரர்களான அபிஜித், ராபின் தனது நண்பரான நவ்ஜீத்தை கடந்த 5ஆம் திகதி கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளனர்.

இதில் நிலைகுலைந்த விழுந்த நவ்ஜீத் அங்கேயே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, நவ்ஜீத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தப்பியோடிய சகோதரர்களை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்தனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...