Melbourneமெல்போர்னில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண் மரணம் - இரண்டு...

மெல்போர்னில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பெண் மரணம் – இரண்டு மருத்துவர்கள் பணி இடைநீக்கம்

-

மெல்போர்ன் பெண் ஹர்ஜித் கவுர் கருக்கலைப்பு செய்து இறந்தது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் இரு மருத்துவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

30 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் ஜனவரி 12ஆம் திகதி ஹம்ப்டன் பார்க் மகளிர் சுகாதார கிளினிக்கில் சத்திரசிகிச்சைக்காகச் சென்ற பின்னர் உயிரிழந்துள்ளார்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவரது இதயத் துடிப்பு நின்றுவிட்டதாகவும், மீண்டும் உயிர்ப்பிக்க முடியவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

விக்டோரியாவில் கருக்கலைப்பு மற்றும் கருத்தடை சேவைகளை வழங்கும் முக்கிய தனியார் நிறுவனமான MSI இன் மருத்துவ இயக்குனர் பிலிப் கோல்ட்ஸ்டோன், முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வது பொதுவாக மிகவும் பாதுகாப்பானது என்றார்.

இது மிகவும் பாதுகாப்பான செயல்முறை என்றும், மரணம் நம்பமுடியாத அளவிற்கு அரிதானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பெண் எப்படி இறந்தார் அல்லது அவரது மரணத்தைத் தடுக்க முடியுமா என்பது இன்னும் விசாரணையில் உள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் மருத்துவ ஒழுங்குமுறை நிறுவனம், கிளினிக்கில் உள்ள பல மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்துள்ளது.

மயக்க மருந்து நிபுணர் டோனி சோவ் மற்றும் கிளினிக் இயக்குநரும் உரிமையாளருமான மிச்செல் கென்னி ஆகியோர் கடந்த மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டனர், மேலும் மகளிர் மருத்துவ நிபுணர் ருடால்ப் லோப்ஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...