Newsஇந்தியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

-

இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாகினர்.

உயிரிழந்தவர்களில் 12 குழந்தைகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

27 உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சில உடல்கள் இன்னும் மீட்கப்பட்டு வருவதாகவும் ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் ராஜு பார்கவா தெரிவித்தார்.

இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், மோசமாக எரிந்த உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மதியம் விளையாட்டு மையத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நிரம்பியிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது.

தீவிபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் மிகவும் வருத்தமடைந்ததாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...