Sports3 ஆவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா - IPL...

3 ஆவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா – IPL 2024

-

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதின.

இறுதிப்போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் ஸ்டார்க் பந்து வீச்சில் 2 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை வைபவ் அரோரா வீசிய நிலையில் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல்(0 ஓட்டங்கள்) கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ராகுல் திரிபாதி 13 பந்தில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழக்க மற்றொரு வீரரான நிதிஷ் ராணா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க ஷபாஸ் அகமது 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ராகுல் திரிபாதி 13 பந்தில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழக்க மற்றொரு வீரரான நிதிஷ் ராணா 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா வீரர்களின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறியது. சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க. அடுத்துவந்த ஷபாஸ் அகமது 8 ஓட்டங்களிலும், அப்துல் சமத் 12 ஓட்டங்களிலும், கிளாசன் 16 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில், ஐதராபாத் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

சிறப்பாக பந்து வீசிய கொல்கத்தா வீரர்கள் ரசல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ராணா தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ், நரைன், வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்

இதன் மூலம் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 17 ஆவது ஐ.பி.எல் கிண்ணத்தை தனதாக்கியது.

நன்றி தமிழன்

Latest news

பாக்டீரியாக்களை கொல்லும் ஒருவகை சிப்பி இனம்

ஆஸ்திரேலிய சிப்பியின் ஒரு இனம் உடலில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகம் நடத்தியது. Sacostria glomerata எனப்படும்...

ஆஸ்திரேலியாவிலிருந்து மேலும் இரண்டு நாடுகளுக்கு மனிதாபிமான விசாக்கள்

சுமார் ஆயிரம் பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுக்கு ஆஸ்திரேலியாவால் தற்காலிக மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் மோதலால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளின் குடிமக்களுக்கு அக்டோபர் 2024 முதல் தற்போது...

ஆஸ்திரேலியர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்து வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்கள் பின்பற்றும் மதங்கள் குறித்த புதிய அறிக்கையை மக்கள்தொகை மற்றும் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் 20 சதவீதம்...

ஆஸ்திரேலிய மாநிலங்களில் அதிகரித்துவரும் வெப்பநிலை

மேற்கு ஆஸ்திரேலியாவில் நேற்று அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த கோடையில் பெர்த் பெருநகர விமான நிலையத்தில் வெப்பநிலை 44.7 டிகிரியாகவும், நகரின் வெப்பநிலை...

கடந்த சில நாட்களாக விக்டோரியா சாலையில் அதிகரித்துள்ள விபத்துக்கள்

மெல்பேர்ண் கிழக்கில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை உத்தியோகபூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மவுண்ட் ஈவ்லினில் உள்ள கிளெக் வீதியில் சாரதி...

உலகின் முதல் டிரில்லியனர் பற்றிய புதிய வெளிப்பாடு

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் சொத்துக்கள் குறித்த சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, எலோன் மஸ்க் மீண்டும் உலகின் பணக்காரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார். நேற்றைய நிலவரப்படி அவரது...