Sports3 ஆவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா - IPL...

3 ஆவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா – IPL 2024

-

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதின.

இறுதிப்போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் ஸ்டார்க் பந்து வீச்சில் 2 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை வைபவ் அரோரா வீசிய நிலையில் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல்(0 ஓட்டங்கள்) கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ராகுல் திரிபாதி 13 பந்தில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழக்க மற்றொரு வீரரான நிதிஷ் ராணா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க ஷபாஸ் அகமது 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ராகுல் திரிபாதி 13 பந்தில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழக்க மற்றொரு வீரரான நிதிஷ் ராணா 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா வீரர்களின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறியது. சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க. அடுத்துவந்த ஷபாஸ் அகமது 8 ஓட்டங்களிலும், அப்துல் சமத் 12 ஓட்டங்களிலும், கிளாசன் 16 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில், ஐதராபாத் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

சிறப்பாக பந்து வீசிய கொல்கத்தா வீரர்கள் ரசல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ராணா தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ், நரைன், வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்

இதன் மூலம் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 17 ஆவது ஐ.பி.எல் கிண்ணத்தை தனதாக்கியது.

நன்றி தமிழன்

Latest news

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு புதிய நண்பராக மாறியுள்ள AI

பல ஆஸ்திரேலிய குழந்தைகள் AI தொழில்நுட்பத்தை நோக்கி அதிகளவில் திரும்புவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Norton வெளியிட்டுள்ள சைபர் பாதுகாப்பு நுண்ணறிவு அறிக்கை இது குறித்த தகவல்களை...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

அடிலெய்டு காவல்துறைக்கு 251 முறை போன் செய்த நபர்

எட்டு மணி நேரத்தில் காவல்துறையினருக்கு 251 அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படும் அடிலெய்டு நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  நேற்று மாலை 4.45 மணி முதல்...