Sydneyசிட்னியில் அலையில் சிக்கி உயிரிழந்த இரு பெண்கள்

சிட்னியில் அலையில் சிக்கி உயிரிழந்த இரு பெண்கள்

-

சிட்னி சதர்லேண்ட்ஷயர் கடற்கரையில் உள்ள கர்னெல் என்ற இடத்தில் இரண்டு இளம் பெண்கள் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் பாறையில் இருந்த பெண்கள் குழு பலத்த அலைகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒரு பெண் விபத்தில் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 4.30 மணியளவில் கர்னெல் கடற்கரையில் பெண்கள் குழுவொன்று விபத்துக்குள்ளானதாக அவசர சேவை பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

நீரில் மூழ்கிய பெண்களை பாதுகாப்பு படையினர் மீட்டு வைத்தியர்கள் சிகிச்சை அளித்த போதிலும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மேலும் அவர் பாறைகளில் மோதி முதுகுத்தண்டில் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பகுதி மீனவர்கள் அதிகம் விரும்பிச் செல்லும் பகுதியாக இருந்தாலும், இந்தப் பெண்கள் மீன் பிடித்ததாக எந்தத் தகவலும் இல்லை என போலீஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இரண்டு பெண்களும் 20 வயதுடைய நேபாள நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த மாதமும் இதே கடற்கரையில் இரண்டு மீனவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இந்த மரணத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் அடையாளம் காணப்படவில்லை.

Latest news

பாலினச் சமத்துவத்தைப் பொறுத்ததே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை – அமைச்சர் Benny Wong

புதிய அனைத்துலக உத்தியின்கீழ் பாலினச் சமத்துவத்தைப் பொறுத்தே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை, அரசதந்திரம், வர்த்தகம், உதவித் திட்டங்கள் அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பென்னி...

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி 17 வயது சிறுமி மரணம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தின் நீரில் சுறா தாக்கி ஒரு பெண் நீச்சல் வீரர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே...

பாக்டீரியா அச்சுறுத்தல் காரணமாக குடிநீரை கொதிக்க வைத்து பருகுமாறு அறிவுறுத்தல்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய கடற்கரையில் வசிப்பவர்கள் கொதிக்க வைத்த தண்ணீரை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் குழாய் நீரில் E.coli என்ற பாக்டீரியா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து...

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி உயிரிழப்பு

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விபத்தில் இறந்தவர் "கனகராஜா மோனிதா" என்ற...

விக்டோரியன் பெண்களுக்கு இலவச இனப்பெருக்க சுகாதார சேவை

விக்டோரியன் பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை இலவசமாக வழங்க மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச சிறப்பு சிகிச்சை அளிக்க...

குயின்ஸ்லாந்து பகுதிகளுக்கு மேலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து மக்களுக்கு புயல்கள் மற்றும் கனமழைக்கான ஆபத்து தொடர்ந்து இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பருவமழை அழுத்தம் தீவிரமாக இருப்பதால், இந்த வாரம் முழுவதும்...