Newsஆஸ்திரேலியாவில் காணாமல் போயுள்ள 56,000க்கும் அதிகமானோர்

ஆஸ்திரேலியாவில் காணாமல் போயுள்ள 56,000க்கும் அதிகமானோர்

-

கடந்த 2023ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மட்டும் 56,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு குயின்ஸ்லாந்தில் மட்டும் 9,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணாமல் போனவர்களின் பின்னணியில் மனநலம், அதிர்ச்சி அல்லது தற்கொலை ஆகியவையும் இருப்பதாக காணாமல் போனோர் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சாரா வெய்லண்ட் கூறுகிறார்.

கடந்த சில வருடங்களாக, இனந்தெரியாத மனித எச்சங்களைப் பயன்படுத்தி காணாமல் போன 19 பேர் தொடர்பில் புதிய தடயவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பரிசோதிக்கப்பட்ட சில எலும்புகள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் வருடாந்தம் 55,000க்கும் அதிகமானோர் காணாமல் போவதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காணாமல் போனவர்கள் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அது எப்போதும் வெற்றியடைவதில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலிய மாநகரப் பகுதியில் நீண்டகாலமாக காணாமல் போனவர்கள் 14 பேர் உள்ளதாகவும், இதில் வெளிநாட்டில் காணாமல் போன இருவர் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பொதுமக்களின் உதவியுடன் அவர்களது அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைத்துவிடுவோம் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...