Newsஆஸ்திரேலியாவில் காணாமல் போயுள்ள 56,000க்கும் அதிகமானோர்

ஆஸ்திரேலியாவில் காணாமல் போயுள்ள 56,000க்கும் அதிகமானோர்

-

கடந்த 2023ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மட்டும் 56,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு குயின்ஸ்லாந்தில் மட்டும் 9,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணாமல் போனவர்களின் பின்னணியில் மனநலம், அதிர்ச்சி அல்லது தற்கொலை ஆகியவையும் இருப்பதாக காணாமல் போனோர் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சாரா வெய்லண்ட் கூறுகிறார்.

கடந்த சில வருடங்களாக, இனந்தெரியாத மனித எச்சங்களைப் பயன்படுத்தி காணாமல் போன 19 பேர் தொடர்பில் புதிய தடயவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பரிசோதிக்கப்பட்ட சில எலும்புகள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் வருடாந்தம் 55,000க்கும் அதிகமானோர் காணாமல் போவதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காணாமல் போனவர்கள் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அது எப்போதும் வெற்றியடைவதில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலிய மாநகரப் பகுதியில் நீண்டகாலமாக காணாமல் போனவர்கள் 14 பேர் உள்ளதாகவும், இதில் வெளிநாட்டில் காணாமல் போன இருவர் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பொதுமக்களின் உதவியுடன் அவர்களது அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைத்துவிடுவோம் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

Dating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

மெல்பேர்ணில் 17 வயது சிறுமி ஒருவர் Dating app மூலம் அறிமுகமான ஒரு இளைஞரை நேரில் சந்தித்து பாலியர் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில்...

டிமென்ஷியா நோய்க்கு தீர்வி வழங்க பயன்படும் AI தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவின் வயதான சமூகத்தினரிடையே டிமென்ஷியா வளர்ந்து வரும் ஒரு பிரச்சனையாகும், மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கும். உலகளவில் சுமார் 50...

NSW-வின் கடற்கரை பகுதிகளில் கனமழை – வெள்ள எச்சரிக்கை விடுப்பு

இந்த வாரம் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் Hunter மற்றும் Mid North Coast...

போப் லியோவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார் பிரதமர் அல்பானீஸ்

போப் லியோ XIV பதவியேற்பு நாளான நேற்று உலகின் பில்லியனுக்கும் அதிகமான கத்தோலிக்கர்களுக்கும் ஒரு புனிதமான நாளாக மாறியுள்ளது. வத்திக்கானில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ளும் ஏராளமான...

மெல்பேர்ணில் ஒருவரை வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி வைத்து மிரட்டிய கும்பல்

மெல்பேர்ணைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டிற்குள் நுழைந்த ஆயுதமேந்திய குண்டர்கள் தன்னைச் சுடப் போவதாக மிரட்டியதால் ஏற்பட்ட பயங்கரத்தைப் பற்றி ஊடகங்களுக்கு கூறியுள்ளார். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம்...

NSW-வின் கடற்கரை பகுதிகளில் கனமழை – வெள்ள எச்சரிக்கை விடுப்பு

இந்த வாரம் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் Hunter மற்றும் Mid North Coast...