NewsApple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

-

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான மற்றும் அதிநவீனத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் Safari மற்றும் iOS-இல் உள்ள பிற இணைய உலாவிகளால் பயன்படுத்தப்படும் ‘WebKit’ எனும் browser engine-இல் இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஹேக்கர்கள் உருவாக்கியுள்ள இணையதளம் ஒன்றை ஒரு பயனர் பார்வையிடுவதன் மூலம், அவரது சாதனத்தில் ஊடுருவித் தரவுகளைத் திருட அல்லது தீங்கிழைக்கும் நிரல்களை இயக்க இக்குறைபாடு வழிவகுக்குமென குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் பரவலாக இடம்பெறவில்லையென்றும், குறிப்பிட்ட சில தனிநபர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருப்பதாகவும் அப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் அல்லது யார் இலக்கு வைக்கப்பட்டார்கள் என்ற விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.

உங்கள் iPhone மற்றும் iPad சாதனங்களில் உடனடியாக மென்பொருள் பதிப்பை புதுப்பிக்கவும். சமீபத்திய பாதுகாப்புத் திருத்தங்களை நிறுவுவதன் மூலம் ஹேக்கர்களின் ஊடுருவலைத் தடுக்க முடியும். ‘Zero-day’ குறைபாடுகளிலிருந்து தற்காத்துக்கொள்ள குறித்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...