அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் நிலவும் வாடகை வீட்டு நெருக்கடி காரணமாக, வேலை செய்பவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மலிவு விலையில் வீடுகள் கிடைக்காமல் பலர் வீடிழந்து தவிப்பதாக கூறப்படுகிறது.
குறைந்த வாடகையில் வாடகை வீடுகள் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில், சிட்னியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பால்கனியை அறையாக வாடகைக்கு விடுவதாக இணையத்தில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.
விளம்பரத்தை வெளியிட்ட வீட்டின் உரிமையாளர்கள், இது வாரத்திற்கு $360, பில்கள் உட்பட கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள், சமீபத்திய அறிக்கைகளின்படி, சிட்னியின் சராசரி வீட்டின் விலை ஒரு வாரத்திற்கு $750 என்ற சாதனையை எட்டியது.
எவ்வாறாயினும், அதிக விலைக்கு வாடகை வீடுகளை பெற்றுக் கொள்ள முடியாததாலும், தேவை குறைவாலும், குடியேற்றம் குறைந்ததாலும் வீட்டு விலை அதிகரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வீட்டு உரிமையாளர்கள் வாடகை நிபந்தனைகளை தளர்த்தி வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.





