Newsஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் செல்ஃபி எடுக்க இலவச போன்கள்

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் செல்ஃபி எடுக்க இலவச போன்கள்

-

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் வீரர்கள் அனைவருக்கும், கேம்களில் வெற்றி பெற்று செல்ஃபி எடுக்க சாம்சங் நிறுவனம் இலவச போன்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக அந்நிறுவனம் தயாரித்துள்ள Galaxy Z Flip6 போன்கள் இவ்வாறு வழங்கப்படுவதால், வரலாற்றில் முதல்முறையாக இது போன்ற தனித்துவமான அனுபவத்தை போட்டியாளர்களுக்கு வழங்குவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வெற்றிபெறும் ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் வெற்றியாளர்கள் தங்களின் விருதுகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏனைய முக்கிய தருணங்களை கவனத்தில் கொள்வதற்கும் இது சிறந்த வாய்ப்பாக அமையும் என தொலைபேசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் முதல்முறையாக விருது மேடையில் செல்ஃபி எடுப்பது விளையாட்டு வீரர்களின் சமூக வலைதளங்களில் புரட்சியை ஏற்படுத்தும் என சாம்சங் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு சமீபத்திய கேலக்ஸி போன்களை வழங்குவது பெருமையாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் போன்கள் AI தொழில்நுட்பம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...