Newsரயில் சிக்னல்களுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு அரசு விதிக்கும் $658 அபராதம்

ரயில் சிக்னல்களுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு அரசு விதிக்கும் $658 அபராதம்

-

தெற்கு ஆஸ்திரேலியாவில், ரயில் மற்றும் டிராம் சிக்னல்களுக்குக் கீழ்ப்படியாமல், கவனக்குறைவாக செயல்படும் நபர்களுக்கு $658 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியாவில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ரயில் மற்றும் டிராம் விபத்துக்களை எதிர்கொண்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்களையும், ஓட்டுநர்களையும் பாதுகாக்கும் வகையில், போக்குவரத்து வலையமைப்பில் பொது பாதுகாப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளதுடன், ரயில் நிலையங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோக்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சில பயணிகளின் கவனக்குறைவான செயற்பாடுகளினால் புகையிரத ஊழியர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுவதாக புகையிரத சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு, தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில்வேயில் மக்களின் பாதுகாப்பற்ற நடத்தை தொடர்பான 123 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சுமார் 140 தொன் எடையுள்ள சாதாரண பயணிகள் ரயிலை அவசர காலத்தில் நிறுத்துவதற்கு சுமார் 470 மீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும் உடனடியாக நிறுத்த முடியாது எனவும் சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...