Newsகணவனால் உயிரிழந்த இலங்கைத் தாய் - நீதிமன்றத்தில் மகன் வாக்குமூலம்

கணவனால் உயிரிழந்த இலங்கைத் தாய் – நீதிமன்றத்தில் மகன் வாக்குமூலம்

-

மெல்பேர்ன், Sandhurst பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன் இன்று நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

ஆத்திரத்தில் தந்தை தாயை தாக்கியபோது உதவி கேட்டு அலறியடித்து ஓடியதாகவும், தந்தை கோடாரியால் துரத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் 19 வயது மகன் தினுஷ் குரேரா, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி தனது வீட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் ஜூரிக்கு சாட்சியமளித்துள்ளார்.

தாயின் மரணத்தின் போது 17 வயதுடைய குறித்த இளைஞன் இன்று 14 ஜூரிகளுக்கு காணொளி மூலம் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் பெண்ணை கோடரியால் தாக்கி அம்புலன்ஸ் வாகனத்தை அழைக்கும் முயற்சியை தடுத்ததையும் மகன் நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

தப்பிக்க முயன்றால் அனைவரையும் வீட்டில் பெட்ரோல் ஊற்றி கொன்று விடுவதாக தந்தை மிரட்டியதாக இந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 47 வயதான சந்தேக நபர், தனது மனைவி நெலோமி பெரேராவை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளதுடன், தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக தற்காப்புக்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கொலை தொடர்பான பல குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அவர், தான் மகனைத் தாக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

குரேராவின் மகன் வீடியோ மூலம் கொலையை விவரித்ததை தினுஷ் உணர்ச்சியின்றி பார்த்ததாக நீதிமன்ற பதிவுகள் காட்டுகின்றன.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...