Newsபிரிஸ்பேன் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் - விமானங்கள் தாமதமாகலாம்

பிரிஸ்பேன் விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் – விமானங்கள் தாமதமாகலாம்

-

பிரிஸ்பேன் விமான நிலையத்தில் ஊழியர்கள் குழு ஒன்றின் வேலைநிறுத்தம் காரணமாக விமானம் தாமதமாகலாம் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் ஊழியர் சங்கம் மற்றும் உற்பத்தி தொழிலாளர் சங்கம் இணைந்து இந்த பணிப்புறக்கணிப்பை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று பணியில் இல்லாததால் விமானங்கள் தாமதமாகலாம் என விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

சம்பளப் பிரச்சினை காரணமாக இத்தொழிலாளர்கள் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது பிரிஸ்பேன் விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச டெர்மினல்களில் பேக்கேஜ் கையாளும் சேவைகளையும் பாதிக்கும்.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பயணிகள் தங்கள் விமானத்திற்கு முன்கூட்டியே வருமாறு விமான நிலைய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...