Newsஎஜமானை துப்பாக்கியால் சுட்ட ரோபோ நாய்!

எஜமானை துப்பாக்கியால் சுட்ட ரோபோ நாய்!

-

ரோபோ நாய் ஒன்று சோதனை முயற்சியில் பிரபல யூடியூபர் டாரன் ஜாசனை நெருப்புத் துப்பாக்கியால் சுட்ட காட்சி இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது.

‘ஸ்பீடு’ என்று அறியப்படும் டாரன் ஜாசன், சமீபத்தில் ஒரு ரோபோ நாய்க்குட்டியை வாங்கி அதை நேரடியாக இணையத்தள காணொளியில் பரிசோதித்துப் பார்த்தார்.

முதலில் அவர் ரோபோ நாய்க்கு கை கொடுக்கும் போது நாயும் முன்னங்காலைத் தூக்கிக் கை கொடுத்தது. பின்னர் அவர் பின்னோக்கி பல்டி அடித்தபோது, நாயும் துள்ளிக் குதித்தது.

பிறகு ரோபோ நாயில் இணைக்கப்பட்டுள்ள துப்பாக்கி பொத்தானை அழுத்தி விட்டு, குரைக்கும்படி கட்டளையிட்டார். ஆனால் ரோபோ நாய் எதிர்பாராதவிதமாக, துப்பாக்கியை இயக்கி எஜமானரை எதிரியாக நினைத்துச் சுடத் தொடங்கியது.

துப்பாக்கியிலிருந்து நெருப்பு பிழம்பு வெளியேறி டாரன் ஜாசனை தாக்கியது. இதை எதிர்பாராத அவர் அருகிலிருந்த நீச்சல் குளத்தில் குதித்தார்.

அப்போதும் ரோபோ நாய் அவரை நோக்கித் தொடர்ந்தும் சுட்டதில் ஒருவழியாக அதன் பார்வையிலிருந்து தப்பி, பின்புறமாக வந்து அதன் துப்பாக்கி பொத்தானை நிறுத்தியபிறகுதான் ரோபோ நாய் சுடுவதை நிறுத்தியது.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் காயம் அடையாமல் தப்பினார்.

Latest news

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்கு Qantas சிறப்பு கட்டணங்கள்

Qantas Airlines இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்வதேச விமான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு சிறப்பு விலைச் சலுகைகள் கிடைக்கின்றன. நேற்று...

அர்ஜென்டினாவில் குழந்தைகளை தத்தெடுக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசு ஆலோசனை

அர்ஜென்டினாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய பெற்றோருக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இது நாட்டில் உள்ள சட்ட நிலைமை மற்றும்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

மெல்பேர்ணில் 17 வயது சிறுவன் ஒருவன் வாளால் தாக்கப்பட்டு படுகாயம்

மெல்பேர்ண் , செயிண்ட் கில்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில், 17 வயது சிறுவன் ஒருவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வாகனம் ஒன்றினால் மோதி படுகாயமடைந்தான் . இந்த...