Newsஎஜமானை துப்பாக்கியால் சுட்ட ரோபோ நாய்!

எஜமானை துப்பாக்கியால் சுட்ட ரோபோ நாய்!

-

ரோபோ நாய் ஒன்று சோதனை முயற்சியில் பிரபல யூடியூபர் டாரன் ஜாசனை நெருப்புத் துப்பாக்கியால் சுட்ட காட்சி இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது.

‘ஸ்பீடு’ என்று அறியப்படும் டாரன் ஜாசன், சமீபத்தில் ஒரு ரோபோ நாய்க்குட்டியை வாங்கி அதை நேரடியாக இணையத்தள காணொளியில் பரிசோதித்துப் பார்த்தார்.

முதலில் அவர் ரோபோ நாய்க்கு கை கொடுக்கும் போது நாயும் முன்னங்காலைத் தூக்கிக் கை கொடுத்தது. பின்னர் அவர் பின்னோக்கி பல்டி அடித்தபோது, நாயும் துள்ளிக் குதித்தது.

பிறகு ரோபோ நாயில் இணைக்கப்பட்டுள்ள துப்பாக்கி பொத்தானை அழுத்தி விட்டு, குரைக்கும்படி கட்டளையிட்டார். ஆனால் ரோபோ நாய் எதிர்பாராதவிதமாக, துப்பாக்கியை இயக்கி எஜமானரை எதிரியாக நினைத்துச் சுடத் தொடங்கியது.

துப்பாக்கியிலிருந்து நெருப்பு பிழம்பு வெளியேறி டாரன் ஜாசனை தாக்கியது. இதை எதிர்பாராத அவர் அருகிலிருந்த நீச்சல் குளத்தில் குதித்தார்.

அப்போதும் ரோபோ நாய் அவரை நோக்கித் தொடர்ந்தும் சுட்டதில் ஒருவழியாக அதன் பார்வையிலிருந்து தப்பி, பின்புறமாக வந்து அதன் துப்பாக்கி பொத்தானை நிறுத்தியபிறகுதான் ரோபோ நாய் சுடுவதை நிறுத்தியது.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் காயம் அடையாமல் தப்பினார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...

கம்போடியாவில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கம்போடியாவில் இணைய மோசடி செயல்களை மேற்கொள்ளும் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடிய பொலிஸார் கடந்த 16ம் திகதி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இணைய...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...