Newsகோவிட்-19 தொற்றை அண்டை வீட்டுக்காரருக்கு பரப்பிய அவுஸ்திரேலிய பெண்

கோவிட்-19 தொற்றை அண்டை வீட்டுக்காரருக்கு பரப்பிய அவுஸ்திரேலிய பெண்

-

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தன்னுடைய அண்டை வீட்டுக்காரருக்கு உயிரை பறிக்கக் கூடிய கோவிட் 19 தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு சிறைத் தண்டனையை தவிர்த்து 3 மாத இடைநிறுத்தப்பட்ட தண்டனை மற்றும் $886.75 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

54 வயதான பெண் மிகுந்த உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தும் டிசம்பர் 21, 2021ம் ஆண்டு படிக்கட்டில் நேருக்கு நேர் சந்தித்ததாக புற்றுநோயாளியான உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரின் வைரஸ் DNA (viral DNA) கிட்டத்தட்ட 100 சதவீதம் ஒத்துப் போயிருப்பதாகவும், நிபுணர்களின் சாட்சியங்கள் படி, அதை பிரதிவாதி(கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்) தான் அதை பெறுநருக்கு அனுப்பி இருக்க வேண்டும் என்பது உறுதி என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், “ தனிப்பட்ட முறையில் உங்களுக்காக வருந்துகிறேன், அநேகமாக இதுப்போன்று பலமுறை நடந்து இருக்கும்” என்று குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணிடம் நீதிபதி தெரிவித்தார்.

ஆனால் துரதிஷ்டவசமாக நிபுணர்கள் உங்களிடம் இருந்து தான் தொற்று பரவியுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் தண்டிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...