Newsஆஸ்திரேலியாவின் மக்களை மரணத்திலிருந்து காப்பாற்ற ஒரு வழி

ஆஸ்திரேலியாவின் மக்களை மரணத்திலிருந்து காப்பாற்ற ஒரு வழி

-

ஆஸ்திரேலியாவில் உயர் இரத்த அழுத்த விகிதங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேசிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் 6.8 மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அதிகளவானோர் தமக்கு இந்நிலை இருப்பதை அறியாமலேயே அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், சுமார் 32 வீதமானவர்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலையில் உயர் இரத்த அழுத்த நிலைமைகளை எதிர்நோக்கும் மக்களுக்கு கல்வி கற்பிப்பதற்கும், கண்டறியப்படாதவர்களை சிகிச்சைக்கு அனுப்புவதற்கும் விசேட செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2030ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் உயர் ரத்த அழுத்தத்தை 70 சதவீதம் கட்டுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

உயர் இரத்த அழுத்தம் ஆஸ்திரேலியாவில் தடுக்கக்கூடிய மரணத்திற்கு முதன்மையான காரணமாக கருதப்படுகிறது, மேலும் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அபாயகரமான நிலைமைகளை விளைவிப்பதாக கூறப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் தொடர்புடைய நிலைமைகளால் ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் 25,000 இறப்புகள் ஏற்படுவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

சத்தான உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது, உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, காரம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைப்பது, மது, புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...