News24 ஆண்டுகளாக என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர்!

24 ஆண்டுகளாக என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர்!

-

கர்நாடகாவில் பழைய என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர் குறித்த தகவல் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் குமார் (40). தாய், தந்தையர் யார் என்ற தெரியாத நிலையில், திருமணமும் ஆகாமல் கடந்த 24 ஆண்டுகளாக பழைய வாகன என்ஜின் ஒயிலை ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ்வதாகத் தெரிவிக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தாலுகா அலுவலக வளாகத்தில் கருநிறத்தில் என்ஜின் ஆயிலை குடித்து வந்த குமாரை பலரும் சூழ்ந்துகொண்டு ஆச்சரியமாக பார்த்தனர்.

இதுகுறித்து குமாரிடம் விசாரித்ததில், கட்டிடத் தொழில் செய்து வந்தபோது கூலி கொடுக்காததால் பசிக்காக என்ஜின் ஒயில் குடித்ததாகவும், அதனையே பழக்கப்படுத்திக்கொண்டதாகவும் கூறுகிறார்.

கடந்த 24 ஆண்டுகளாக என்ஜின் ஒயில், அவ்வப்போது காகிதங்கள், டீ, கொபி ஆகியவற்றை குடிப்பதாகவும், நாளொன்றுக்கு 5 லீற்றர் வரை வாகன பழுது பார்க்கும் நிலையங்களில் பணமின்றி பழைய என்ஜின் ஒயில்களை வாங்கி குடிப்பதாகவும், இதனால் தனக்கு எவ்வித உடல் உபாதையும் இல்லை என்றார்.

ஐயப்ப பக்தி காரணமாக எப்பொழுதும் கருநிற ஆடைகள் அணிந்துக்கொள்வதாகக் கூறும் இவர், கோயிலுக்கு சென்று திரும்பியபோது ரயில் டிக்கெட் இல்லாமல் ஒசூரில் இறக்கிவிட்டதாகவும், சித்ரதுர்கா செல்ல பணமில்லாமல் பலரிடம் கேட்டு ஊருக்கு செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, உணவாக பழைய என்ஜின் ஒயிலை குடிக்கும் நபரை பலரும் ஆச்சரியமாகவும், திகிலோடு பார்த்துச் செல்கின்றனர்.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...