News24 ஆண்டுகளாக என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர்!

24 ஆண்டுகளாக என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர்!

-

கர்நாடகாவில் பழைய என்ஜின் ஒயிலை குடித்து உயிர் வாழும் நபர் குறித்த தகவல் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் குமார் (40). தாய், தந்தையர் யார் என்ற தெரியாத நிலையில், திருமணமும் ஆகாமல் கடந்த 24 ஆண்டுகளாக பழைய வாகன என்ஜின் ஒயிலை ஆகாரமாகக் கொண்டு உயிர் வாழ்வதாகத் தெரிவிக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தாலுகா அலுவலக வளாகத்தில் கருநிறத்தில் என்ஜின் ஆயிலை குடித்து வந்த குமாரை பலரும் சூழ்ந்துகொண்டு ஆச்சரியமாக பார்த்தனர்.

இதுகுறித்து குமாரிடம் விசாரித்ததில், கட்டிடத் தொழில் செய்து வந்தபோது கூலி கொடுக்காததால் பசிக்காக என்ஜின் ஒயில் குடித்ததாகவும், அதனையே பழக்கப்படுத்திக்கொண்டதாகவும் கூறுகிறார்.

கடந்த 24 ஆண்டுகளாக என்ஜின் ஒயில், அவ்வப்போது காகிதங்கள், டீ, கொபி ஆகியவற்றை குடிப்பதாகவும், நாளொன்றுக்கு 5 லீற்றர் வரை வாகன பழுது பார்க்கும் நிலையங்களில் பணமின்றி பழைய என்ஜின் ஒயில்களை வாங்கி குடிப்பதாகவும், இதனால் தனக்கு எவ்வித உடல் உபாதையும் இல்லை என்றார்.

ஐயப்ப பக்தி காரணமாக எப்பொழுதும் கருநிற ஆடைகள் அணிந்துக்கொள்வதாகக் கூறும் இவர், கோயிலுக்கு சென்று திரும்பியபோது ரயில் டிக்கெட் இல்லாமல் ஒசூரில் இறக்கிவிட்டதாகவும், சித்ரதுர்கா செல்ல பணமில்லாமல் பலரிடம் கேட்டு ஊருக்கு செல்ல இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, உணவாக பழைய என்ஜின் ஒயிலை குடிக்கும் நபரை பலரும் ஆச்சரியமாகவும், திகிலோடு பார்த்துச் செல்கின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...