News80 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களை அழைத்து செல்லவுள்ள Google

80 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களை அழைத்து செல்லவுள்ள Google

-

Google அதன் செயற்கைக்கோள் படத் தளமான Google Earth பற்றிய அற்புதமான புதுப்பிப்புகளுடன் பயனர்களை 1930ஆம் ஆண்டுக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த மேம்பாடு, தனிநபர்களை 80 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று செயற்கைக்கோள் மற்றும் வான்வழி படங்களை பார்ப்பதற்கு உதவுகிறது.

மேலும் பல்வேறு இடங்களுக்கு இது காலவரிசையை (Timeline) கணிசமாக நீட்டிக்கும். தற்போது, ​​பயனர்கள் கடந்த சில தசாப்தங்களின் படங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் வரவிருக்கும் புதிய அம்சங்கள், 1930களில் லண்டன், பெர்லின், வார்சா மற்றும் பாரிஸ் போன்ற நகரங்கள் எப்படி இருந்தது என ஆராய அனுமதிக்கும். இது நேர வரம்பை திறம்பட இரட்டிப்பாக்குவதுடன், பயனர்களுக்கு “Time travel” மற்றும் இந்த நகர்ப்புற நிலப்பரப்புகளின் பரிணாமத்தை காண ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

கூகுள் அதன் அறிவிப்பில், 1938ல் உள்ள சென் பிரான்சிஸ்கோவிற்கும், 2024ல் அதன் தற்போதைய நிலைக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒப்பீடுகளைக் காட்சிப்படுத்தியது.

இது பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க புவியியல் மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. உதாரணமாக, சான் ஃபிரான்சிஸ்கோ துறைமுகங்களின் வரலாற்று படம். அன்று போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட கப்பல், தற்போது உணவகங்கள் மற்றும் உல்லாசக் கப்பல்கள் என மாறியுள்ளது.

இந்த புதிய அம்சத்தை மொபைல் மற்றும் இணையம் மூலம் பெறலாம். மேலும், வரும் வாரங்களில் இதில் மேம்படுத்தப்பட்ட அம்சம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, google தனது வீதிக் காட்சி (Street View) அம்சத்தை கிட்டத்தட்ட 80 நாடுகளில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. அத்துடன், google earth மற்றும் google மேப்பில் பயனர்கள் மேம்பட்ட படத் தரத்தை எதிர்பார்க்கலாம். ஏனெனில் மேம்பட்ட AI மாதிரிகள் மூலம் காட்சிகளை கூர்மைப்படுத்தி தெளிவுபடுத்துவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...