நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு எடுத்த நடவடிக்கையால், ஆயிரக்கணக்கான நோயாளிகள் வீட்டிலிருந்தே மருத்துவ சிகிச்சை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் நோக்கில், Hospital in Home (HITH) திட்டத்தின் மூலம் கூடுதலாக 3500 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 31.4 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டம் கடந்த வருடம் 5300 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கியதுடன் சிகிச்சைக்கான காத்திருப்பு நேரத்தை குறைத்து அவர்கள் வீட்டிலிருந்தே தொடர்ந்து சிகிச்சை பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதார அமைச்சர் ரியான் பார்க் கூறுகையில், அவசர சிகிச்சைப் பிரிவுகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக நோயாளிகளை வீட்டிலேயே கவனித்துக் கொள்வதற்கான கூடுதல் அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கூடுதலான நிதியானது அதிகமான மருத்துவமனை படுக்கைகளை விடுவிக்கும் மற்றும் திட்டத்திற்கு ஆதரவாக கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் பயன்படுத்தப்படும்.
மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளுக்கு வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், அவர்களை தொலைதூரத்தில் கண்காணிக்கவும் முடியும்.
மருத்துவமனையில் தங்காமல் வீட்டிலேயே பாதுகாப்பான சிகிச்சைக்கான நிலைமைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.





