சியாட்டிலில் இருந்து இஸ்தான்புல் நோக்கி பயணித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானத்தின் தலைமை விமானி நடுவானில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியாட்டில்-டகோமா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் இருந்த 59 வயது பைலட் திடீரென மயங்கி விழுந்ததால், இரண்டாவது விமானி அவசரமாக தரையிறக்கினார்.
அடிப்படை மருத்துவ சிகிச்சை அளித்து தலைமை விமானியை காப்பாற்ற விமான ஊழியர்கள் முயற்சி செய்ததாகவும், அது பலனளிக்காததால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏர்பஸ் ஏ350 விமானத்தின் விமானி ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்பே உயிரிழந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானி இறந்தபோது, 329 பயணிகளுடன் விமானம் சியாட்டிலில் இருந்து கனடாவுக்கு அருகிலுள்ள இஸ்தான்புல்லுக்குச் சென்று கொண்டிருந்தது.
2007 ஆம் ஆண்டு முதல் துருக்கிய ஏர்லைன்ஸில் பணிபுரிந்த இந்த விமானிக்கு கடந்த மார்ச் மாதம் உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு பணிக்கு தகுதியற்ற எந்த உடல்நலப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை மற்றும் சம்பவம் விசாரணையில் உள்ளது.





