Cinemaமுதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்த "அமரன்"!

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்த “அமரன்”!

-

ராணுவத்தை மையமாக வைத்து 90களில்தான் விஜயகாந்த், அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் சில பல படங்கள் வந்தன. அதன்பின் தமிழ் சினிமாவில் அப்படியான படங்கள் அதிகம் வந்ததில்லை. எப்போதாவது ஒரு முறைதான் வந்து கொண்டிருந்தன.

இந்த ‘அமரன்’ திரைப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக் படமாக அவரது திறமையை, போராட்டத்தை, தியாகத்தை வெளிப்படுத்தும் நிறைவான ஒரு படமாக வந்துள்ளது.

கண்காணிப்பு இணையதளமான Sacnilk தகவலின்படி, தீபாவளி பண்டியை முன்னிட்டு ஒக்டோபர் 31 அன்று வெளியான அமரன், முதல் நாளில் உள்ளூர் பாக்ஸ் ஆபிஸில் 21 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது.

ஆரம்பக் கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் அமரன் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் உலகளாவிய ரீதியில் 35 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது.

இது சிவகார்த்திகேயனின் கேரியரில் சிறந்த ஓப்பனிங் ஆகும். தமிழ் நாட்டில் இந்திய மதிப்புப்படி ரூ.17 கோடியும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் முறையே ரூ.40 இலட்சம், ரூ.15 இலட்சம், ரூ.2 இலட்சம் மற்றும் ரூ.1 இலட்சம் வசூலித்துள்ளது.

அனைத்துத் தரப்பிலிருந்தும் பெரும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருவதனால், அமரன் இந்த ஆண்டின் முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் ஐந்து தமிழ்ப் படங்களில் இடம்பிடித்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரித்துள்ளது.

மறைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களையும், ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் இணைந்து எழுதிய `India’s Most Fearless: True Stories of Modern Military Heroes’ என்ற புத்தகத்தையும் அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...