Cinemaமுதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்த "அமரன்"!

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்த “அமரன்”!

-

ராணுவத்தை மையமாக வைத்து 90களில்தான் விஜயகாந்த், அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் சில பல படங்கள் வந்தன. அதன்பின் தமிழ் சினிமாவில் அப்படியான படங்கள் அதிகம் வந்ததில்லை. எப்போதாவது ஒரு முறைதான் வந்து கொண்டிருந்தன.

இந்த ‘அமரன்’ திரைப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக் படமாக அவரது திறமையை, போராட்டத்தை, தியாகத்தை வெளிப்படுத்தும் நிறைவான ஒரு படமாக வந்துள்ளது.

கண்காணிப்பு இணையதளமான Sacnilk தகவலின்படி, தீபாவளி பண்டியை முன்னிட்டு ஒக்டோபர் 31 அன்று வெளியான அமரன், முதல் நாளில் உள்ளூர் பாக்ஸ் ஆபிஸில் 21 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது.

ஆரம்பக் கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் அமரன் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் உலகளாவிய ரீதியில் 35 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது.

இது சிவகார்த்திகேயனின் கேரியரில் சிறந்த ஓப்பனிங் ஆகும். தமிழ் நாட்டில் இந்திய மதிப்புப்படி ரூ.17 கோடியும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் முறையே ரூ.40 இலட்சம், ரூ.15 இலட்சம், ரூ.2 இலட்சம் மற்றும் ரூ.1 இலட்சம் வசூலித்துள்ளது.

அனைத்துத் தரப்பிலிருந்தும் பெரும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருவதனால், அமரன் இந்த ஆண்டின் முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் ஐந்து தமிழ்ப் படங்களில் இடம்பிடித்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரித்துள்ளது.

மறைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களையும், ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் இணைந்து எழுதிய `India’s Most Fearless: True Stories of Modern Military Heroes’ என்ற புத்தகத்தையும் அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...