Cinemaமுதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்த "அமரன்"!

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்த “அமரன்”!

-

ராணுவத்தை மையமாக வைத்து 90களில்தான் விஜயகாந்த், அர்ஜூன் ஆகியோர் நடிப்பில் சில பல படங்கள் வந்தன. அதன்பின் தமிழ் சினிமாவில் அப்படியான படங்கள் அதிகம் வந்ததில்லை. எப்போதாவது ஒரு முறைதான் வந்து கொண்டிருந்தன.

இந்த ‘அமரன்’ திரைப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயோபிக் படமாக அவரது திறமையை, போராட்டத்தை, தியாகத்தை வெளிப்படுத்தும் நிறைவான ஒரு படமாக வந்துள்ளது.

கண்காணிப்பு இணையதளமான Sacnilk தகவலின்படி, தீபாவளி பண்டியை முன்னிட்டு ஒக்டோபர் 31 அன்று வெளியான அமரன், முதல் நாளில் உள்ளூர் பாக்ஸ் ஆபிஸில் 21 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது.

ஆரம்பக் கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் அமரன் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் உலகளாவிய ரீதியில் 35 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது.

இது சிவகார்த்திகேயனின் கேரியரில் சிறந்த ஓப்பனிங் ஆகும். தமிழ் நாட்டில் இந்திய மதிப்புப்படி ரூ.17 கோடியும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் முறையே ரூ.40 இலட்சம், ரூ.15 இலட்சம், ரூ.2 இலட்சம் மற்றும் ரூ.1 இலட்சம் வசூலித்துள்ளது.

அனைத்துத் தரப்பிலிருந்தும் பெரும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருவதனால், அமரன் இந்த ஆண்டின் முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் ஐந்து தமிழ்ப் படங்களில் இடம்பிடித்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரித்துள்ளது.

மறைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களையும், ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் இணைந்து எழுதிய `India’s Most Fearless: True Stories of Modern Military Heroes’ என்ற புத்தகத்தையும் அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...